சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு பவானி ஆற்றை ஆலைக் கழிவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் பவானிசாகரில்

Environment Day

பாறுக் கழுகு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

பாறுக் கழுகு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

Vulture Awarness

Arulagam City Nature Challenge walk

Date : 29.04.2023
Time: 7.00 am to 10.am
Place: Krishnampathi lake
Location link: https://goo.gl/maps/APqJUfa4s8VdKPKf7
Contact: Karthikeyan R
9943931482

Nature Challenge Walk

Article Published in the BNHS magazine : "Hornbill"

In Tamil Nadu, Arulagam, a SAVE Partner, is engaged in setting up a Vulture Safe Zone (VSZ) for the state. Arulagam was established in 2002 to echo the voice of the voiceless and protect threatened flora and fauna by involving targeted stakeholders through participatory action programs.

You don't have a pdf plugin, but you can download the pdf file.

நாற்றுப் பண்ணை அமைப்பு

ஏப்ரல் 7. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியம்  நல்லூர்  ஊராட்சியில்  வாழ்ந்து காட்டுவோம்  திட்டத்தில்  செயல்படும்  உற்பத்தியாளர் குழுவைச்  சேர்ந்த 20 மகளிர்களுக்கு அருளகம்  சார்பில்  நாற்றுப் பண்ணை அமைப்பது மற்றும்  நாற்று  உற்பத்தி செய்வது எப்படி என்பது குறித்துத்  தொழில் நுட்பப் பயிற்சி  அளிக்கப்பட்டது.  வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்  சமுதாய. தொழில்சார் வல்லுனர்  திருமதி  சந்திரா அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.    நாற்றுகள்  உற்பத்தி செய்தலில்  விதை  சேகரிப்பு, விதை நேர்த்தி,  தாய்ப் பாத்தி அமைப்பு, மண் கலவை  முறை  மற்றும்  விதை நடுதல்,  தண்ணீர் தெளிக்கும் முறை குறித்து   அருளகத்தின் சார்பில்  திருமதி கவிதா  அவர்கள் விளக்கமளித்தார்.   அருளகம் செயலர் சு.பாரதிதாசன் நாற்றுப்பண்ணைக் கருவிகள் பராமரிப்பு பண்ணை நிர்வாகம் குறித்து விளக்கினார்.  அருளகத்தின் பொருளாளர் அமிர்தலிங்கம்  அவர்கள் நாற்று பண்ணை  வாழ்வதாரத்திற்கான தொழில்சார்  முறையாக. மேற்கொள்வது  குறித்து  விளக்கமளித்தார்.

Nursery System

காட்டின் குரல் - புத்தக விமர்சனம்

திரு. பா.சதீஸ் முத்து கோபாலின் "காட்டின் குரல்" புத்தக விமர்சனம்.

விமர்சனத்தை படிக்க இங்கே சொடுக்கவும்

மிகவும் உணர்வுப்பூர்வமாக அருமையாக எல்லோரையுமம் ஈர்க்கும்படி எழுதப்பட்டு இருந்தது. இதுவரை யாரும் இந்த நூலை இப்படி விமர்சித்து நான் வாசித்ததில்லை. உங்கள் எழுத்து என்னைப் பெருமைப்பட வைக்கிறது. மட்டற்ற நன்றி உங்களுக்கு

-சு.பாரதிதாசன்

Trident Pneumatic's Donation

கோயமுத்தூரிலிருந்து இயங்கி வரும் ‘ட்ரைடென்ட் நுமாடிக்’ நிறுவனம் அருளகத்திற்கு 5 இலட்சம் நன்கொடை வழங்கியுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  தமது நிறுவனத்தின் சமூக பொறுப்பின் கீழ் இந்தத் தொகையை வழங்கியமைக்காக  திருமதி சரஸ்வதி நடராஜன் அவர்களுக்கும் திரு கே.எஸ். நடராஜன் அவர்களுக்கும் அருளகம் தமது திரளான நன்றிகளை உரித்தாக்குகிறது. இத்தொகையைச் சரியான முறையில் பாறுக் கழுகுகளின் மேம்பாட்டிற்கு மக்களுடன் இணைந்து களப்பணியாற்றப் பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கிறோம்.

Cascade training

Day 1 (15-03-2023) 
Namakkal District

Cascade training on BMW for the doctors of the Namakkal District Health Service Centre was conducted on 15-03-2023. 

Mr. Amithalingam, Arulagam, explained the BMW Rules and laws. Further, he organised an activity-based training on the segregation of BMW. 

Mr. Mani, the trainer, highlighted the need for the safe disposal of Biomedical wastes, using a Powerpoint.  

Mr. John emphasised the do's and don’ts of handling the BMW and he also sensitised to avoid pilferage during intra-mural and extra-mural transportation.

Suggestions and feedback were collected from the participants. We witnessed enthusiastic participation among the participants.

Training for other target audiences viz., staff nurses, health workers and lab technicians will continue till 18 March 2023 Saturday.  

Report by Arulagam. 
15 March 2023

Cascade Training  Cascade Training

12th Annual SAVE Meeting

பாறுக் கழுகுகள் பாதுகாப்பிற்கென ஒருங்கிணைக்கப்படும் 12வது ஆண்டுக் கூட்டம் நேபாள நாட்டில் 
நாவல்பூர் மாவட்டத்திலுள்ள சித்துவான் தேசியப்பூங்காவில் கடந்த மூன்று நாட்களாக  (9 லிருந்து 11 -3- 2023) வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேசு, மியான்மர், கம்போடியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பாறுக் கழுகுகள் தொடார்பாக ஆராய்ச்சியிலும் பாதுகாப்பிலும் ஈடுபட்டுவரும் 45க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை நேபாள பறவைகள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைத்தது. 
இதில் அருளகம் சார்பாக நானும் பேச அழைக்கப்பட்டேன். எனது உரையில் வெவ்வேறு தரப்பு மக்களிடம் எவ்வாறு அருளகம் களப்பணியாற்றி வருகிறது என்பதை எடுத்துரைத்தேன். அத்துடன் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டு அரசால் எடுக்கப்பட்டக் கொள்கை முடிவுகளையும் குறிப்பிட்டேன். அருளகத்தின் முன்னெடுப்புகளையும் தமிழ்நாட்டு அரசின் முன்முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முத்தாயப்பாக உலகிலேயே பாறுக்கழுகுகளுக்கான முதல் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக சித்வான் பகுதி அறிவிக்கப்பட்டது. இப்பகுதியை மக்கள் பங்கேற்புடன் பாதுகாக்கப்ட்ட பகுதியாக உருவாக்கத் தன்பகதூர் சவுத்ரி மற்றும் கிறிஸ்னா பூசல் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் வெளிப்பாடாக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பாறுக் கழுகுகள் பறக்கவிடப்பட்டன. நிகழ்வில் ‘பாறுக் கழுகுகளைத் தேடி’ என்ற எனது நூலையும் வழங்கினேன்.எனது புத்தகத்தின் முகப்புரையில் தன்பகதூர் சவுத்ரி மற்றும் கிறிஸ்னா பூசல்  ஆகிய இருவர் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கும் புத்தகத்தைக் காணிக்கையாக்கி இருப்பதைத் தெரிவித்தபோது நெகிழ்ந்துபோயினர். நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டார். சேவ் அமைப்பின் பொறுப்பாளர் ரைஸ்கீரீன் மற்றும் மேற்பார்வையாளர் கிறிஸ்பௌடன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தமிழ்நாட்டிலும் பாறுக் கழுகுகளுக்கென பாதுகாக்கப்பட்ட மண்டலம் ஒன்று உருவாக வேண்டும். அதை நோக்கி அருளகம் உங்கள் அனைவரது ஆதரவோடும் முன்னெடுக்கும்.

Save meeting   Save annual meeting

SAVE Partners Meeting Agenda

Page 7 of 19

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.