பாறு கழுகுகளைக் காக்க பாராளுமன்றத்தில் குரல் தருவேன் கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி இராஜ்குமார் பேச்சு

பாறு கழுகுகளைக் காக்க பாராளுமன்றத்தில் குரல் தருவேன் கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி இராஜ்குமார் பேச்சு

செப்தம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை பாறு கழுகுகள் விழிப்புணர்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அருளகம் அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை இன்று (07-09-2024) காலை 11.30 மணிக்கு வ.உ.சி. பூங்காவிலிருந்து கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர். ப. கணபதி இராஜ்குமார் அவர்கள் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார்.  ஒவ்வொரு நாட்டிற்கும் மாநிலத்திற்கும் விலங்குகள், பறவைகள், செடிகள் இருப்பது போன்று மாவட்ட அளவிலும் இது போன்று உருவாக்க வேண்டும் என்றும் கோயமுத்தூரில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். அழிந்து வரும் பாறு கழுகுகளைக் காக்க பாராளுமன்றத்தில் குரல் தருவேன் என்றார்.  இந்நிகழ்ச்சிக்கு  கோயமுத்தூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி இரங்கநாயகி அவர்கள் முன்னிலை வகித்தார்.  இப் பறவை இனத்தின் மேல் உள்ள எதிர்மறையான எண்ணங்களையும் களைய வேண்டும் என்றார். 

ஓசை திரு காளிதாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கிப் பேசும்போது,  தமிழ்நாடு முழுவதும் காணப்பட்ட இவ்வினம் தற்போது நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது என்றும் அண்மையில் கோயமுத்தூரில் சிறுமுகைப் பகுதியில் இவை அடிக்கடித் தென்படுகின்றன என்றும் இது நல்லதொரு அறிகுறி என்றும் தெரிவித்தார்.  புலிகள் விரவலுக்கேற்ப இவ்வினமும் பெருகி வருகிறது என்றும் அனைத்து மக்களின் ஒத்துழைப்போடு இவ்வினம் நிச்சயம் மீண்டு வரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

தி.முக. சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைத்தலைவர்,  திரு.நா.மணிசுந்தர் அவர்கள் பேசும்போது, அருளகம் அமைப்பு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாறு கழுகுகளைக் காக்கும் அரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினரும் மாண்புமிகு மேயர் அவர்களும் தங்கள் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவர்களது அக்கறையைக் காட்டுகிறது என்றார். 

இப் பயணத்தின் நோக்கம் குறித்து சு. பாரதிதாசன் பேசும்போது, இவ்வினம் இறந்த உயிரினங்களைத் தின்று இருக்கும் உயிரினங்களைக் காக்கின்றன என்றும் இவை அழிவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தது இறந்துபோன கால்நடைகளில் இருந்த டைக்குளோபினாக்  வலிபோக்கி மருந்தின் வீரியம் என்றும் இது தவிர விசம் தடவிய சடலங்களை எதிர்பாராதவிதமாக உண்ணநேர்ந்ததாலும் இறக்க நேரிட்டது என்றும் அத்துடன் இறந்த விலங்குகள் புதைக்கப்பட்டதாலும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டும் இவ்வினம் பெருகுவது தடைபட்டது என்றும் தெரிவித்தார். இவ்வினத்தைக் காக்க மாநில அரசும் ஒன்றிய அரசும் எடுத்துவரும் நடவடிக்கையைப் பட்டியலிட்டார்.  கால்நடைகள் பயன்பாட்டிற்கு டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைத் தடை செய்தது பற்றியும் குறிப்பிட்டார். இது குறித்து எடுத்துச்சொல்லவும் பாறு கழுகுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் விதமாகவும் பிரச்சார வாகனம் கோயமுத்தூரில் தொடங்கி ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கித் தற்போது பாறு கழுகுகள் வலம் வரும் ஊரைச் சுற்றிலும் சுமார் 600 கி.மீ. செல்ல உள்ளது என்றும் தெரிவித்தார். நிகழ்வில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திருமதி ஸ்ரீ சத்யா,  திருவாளர்கள் ஜவஹர் வெள்ளிங்கிரி, மதன், ஆடிட்டர் ராமமூர்த்தி, கார்த்திக்குமார் ,  சாதிக், டேவிட் பீட்டர், ஆயிஷா, அல்.அமீன் ஹபீப் மற்றும் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் முத்தாய்ப்பாக அருங்காட்சியகத்தில் பாடம் செய்துவைக்கப்பட்ட பாறு கழுகையும் பார்த்து வியந்தனர்.  

பிரச்சார வாகனத்தில் - பாறு என்றால் என்ன? அதில் எத்துனை வகை உண்டு? எங்கு காணலாம்? அவற்றால் சூழலுக்கு என்ன நன்மை? இதன் தனித்துவம் என்ன? இவற்றின் அழிவுக்கு என்ன காரணம்? இவற்றை அழிவிலிருந்து மீட்க கால்நடை வளர்ப்போரும், கால்நடைத் துறையினரும், மருந்து விற்போரும், பொதுமக்களும் என்ன செய்ய வேண்டும்? ஆகிய தகவல்கள் அடங்கிய சிலைடுகள் சுழற்சி முறையில் நகர்வது போல (Digital board) காண்போரைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. க்யூ ஆர் கோடு வழியாகவும் தரவகளைப் பெறும் வண்ணம் பாறு குறித்த பல்வேறு தகவல்கள் எளிய முறையில் விவரிக்கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருளகம் அமைப்பைச் சேர்ந்த சர்மா, அமிர்தலிங்கம், சரவணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Coimbatore MP Ganapathi Rajkumar flags off Vulture Awareness Campaign

I will raise my voice in Parliament to protect the critically endangered vultures - Speech by Honourable Member of Parliament for Coimbatore, Dr. Ganapathi P. Rajkumar, on International Vulture Awareness Day.

As an endeavour to create awareness among the people as part of the International Vulture Awareness Day we ar Arulagam launched an awareness campaign vehicle.

Hon. MP for Coimbatore  Dr. Ganapathy P Rajkumar flagged off the vulture awareness campaign at VOC Park in the city. The campaign vehicle will cover a total of 600 km in Coimbatore, Tirupur and Nilgiris districts.

He proposed the creation of a district-level initiative to preserve and promote local flora and fauna, similar to the efforts made at the national and state levels. He also warned that even clearing the bush would affect the food chain. He also promised to raise the issue of vulture conservation in Parliament. 

 

Mayor R. Ranganayaki graced the occasion and emphasised to throw away the superstition beliefs prevailing among the public about the vultures through the campaign.

“We are working closely with the tribal and villagers in these three districts based on the guidelines of the Tamil Nadu forest department”, sharing the aim of the initiative S Bharathidasan, Secretary Arulagam, said that the first Saturday of September month is observed as the Vulture’s Awareness Day as vultures are one of the critical faunal communities that have to be safeguarded to maintain a healthy environment. 

Mr. N Manisundar, state President of Environment Wing, DMK,  Mr. K Kalidass, founder of Osai NGO participated in the event and shared their valuable speeches. 

K Kalidass, founder of Osai, an NGO, said that,  Forty years ago, vultures were a common sight, but now they are restricted to a few forest areas. In Tamil Nadu, vultures have largely retreated to the forest areas of Coimbatore, Erode, and Nilgiris districts. The sighting of vultures in the Sirumugai area of Coimbatore is a positive indicator of a potential population increase. This suggests that vultures may be expanding their range or recolonizing areas they previously inhabited.

The correlation between vulture populations and tiger populations is intriguing. Both species play important roles in the ecosystem, and their presence can indicate a healthy and balanced environment. K Kalidass's optimism about the recovery of vultures is commendable. With the cooperation of local communities and continued conservation efforts, there is hope that vulture populations can rebound.

N Manisundar, state President of Environment Wing, DMK said that the participation of elected representatives, including the Member of Parliament and Honorable Mayor, is a significant endorsement of the importance of vulture conservation. Their involvement can help raise awareness, mobilise resources, and support policy changes that benefit vultures.

Sharing the aim of the initiative S Bharathidasan, Secretary ‘Of Arulagam’ an NGO said that the first Saturday of September month is observed as the Vulture’s Awareness Day as vultures are one of the critical faunal communities that have to be safeguarded to maintain a healthy environment. 

“We are working closely with the tribal and villagers in these three districts based on the guidelines of the Tamil Nadu forest department. 

The major decline in the vulture population over the years was due to the use of diclofenac to cattle that acted as painkillers for the treatment of cattle. As a result, the central government has banned diclofenac and recently aceclofenac and ketoprofen were also banned. He appealed to the vets and drug store owners to avoid harmful drugs such as diclofenac, ketoprofen and aceclofenac to revive the vulture population.

 

“Tamil Nadu is home to majorly three of nine vulture species residing in India that are listed as critically endangered and Endangered species by the International Union for Conservation of Nature (IUCN). White-rumped Vulture, Red-headed Vulture, and Long-billed Vulture, are the most often recorded species in the Moyar Valley, between Sathyamangalam in the east and Mudumalai in the west. However, the number of individuals of each mentioned species is not abundant across their confined distribution range in Tamil Nadu,” he said.

The campaign vehicle will cover a total of 600 km in Coimbatore, Tirupur and Nilgiris districts.

 

International Vulture Awareness day 2024

Vulture Safe - A Medical Shop Owner's Proactive Efforts ✨🌟 🌿

 

Today I received a photo of a poster from G. Manojkumar, Sri Kumaran Medical's, who is also an executive member of the Sulur Taluk Drug Store Owners Association. The poster, which is displayed on the door of his medical shop, lists banned veterinary medicines and those that require a veterinary prescription, all of which are drugs that are harmful to vultures.

He said that Mr Prakash, the drug inspector, has instructed us to put up notices outside medical shops.I appreciate the proactive involvement of the Drug Inspector and the medical shop owners of Sulur Taluk, including Kumaran Medicals. It is interesting to note that both the Drug Inspector and Mr Manoj had participated in the awareness tour for the medical shop owners organised by Arulagam and the Tamil Nadu State Forest Department last year. His enthusiasm was evident when he took a selfie with a vulture painting in Moyar. We thank him on behalf of Arulagam and all vulture enthusiasts.

We request all medical shops in Coimbatore, Erode and Nilgiris to display this notice prominently and refrain from dispensing these medicines to animals.

பாறு கழுகு பாதுகாப்பு மருந்துக் கடை உரிமையாளரின் முன்முயற்சி

18-08-24

இன்று எனது வாட்சப் புலனத்திற்கு சூலூர் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் ஸ்ரீகுமரன் மெடிக்கல்சு நிர்வாகியுமான திரு மனோஜ்குமார் அவர்கள் ஒரு சுவரொட்டிப் புகைப்படம் ஒன்றை  அனுப்பி அதனைத் தனது மருந்துக் கடையின் வாசலில் ஒட்டியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். வாசித்துப் பார்த்தேன். அதில் கால்நடைகளுக்குத் தடை செய்யப்பட்ட மருந்துகள் என டைக்குளோபினாக், கீட்டோபுரோபேன், அசிக்குளோபினாக் ஆகிய மருந்துகளும் கால்நடை மருத்துவரின் பரிந்துரை மருந்துச் சீட்டு இல்லாமல் தர இயலாது என்ற பட்டியலிடப்பட்ட புளூநிக்சின், நிமிசிலாய்ட்சு, கார்புரோபேன் ஆகிய மருந்துகளும் இடம்பெற்றிருந்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூலூர் மருந்து வணிகர் சங்கப் பொதுக்குழுக்கூட்டத்தில் இவ்வாறு எச்சரிக்கை அறிக்கை அடித்து எல்லா மருந்துக் கடைகளிலும் ஒட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது என்றும் சொன்னார்.

இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?. பட்டியலில்  இடம்பெற்ற மருந்துகள் எல்லாம் பாறு கழுகுகளின் வாழ்வியலோடு நேரடித் தொடர்புடையவை. இந்த மருந்துகளின் வீரியம் வெறும் 0.01 விழுக்காடு கலந்த ஒரே ஒரு மாட்டின் உடலத்தை அவை உண்ண நேர்ந்தால் கூட அது அவற்றுக்குப் பேராபத்தாய் முடியும்.  

மருந்து வணிகர்களுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் இது குறித்து எடுத்துச் சொல்வதற்காக சென்ற வருடம் அவர்களைப் பாறு கழுகுகளின் வாழிடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தோம். அருளகமும் வனத்துறையும் உலக இயற்கைக் காப்பு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில்  குமரன் மெடிக்கல்சு நிர்வாகி மனோஜ் அவர்களும் மருந்து ஆய்வாளர் திரு பிரகாசு அவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்நிகழ்வின் நல்வினையாக இது தற்போது நடந்தேறியுள்ளது.

சூலூர் தாலுகாவில் உள்ள மருந்துக் கடைகளில் எல்லாம் ஒட்டுவதற்கு முன்மொழிந்த பல்லடத்தைச் சேர்ந்த மருந்துக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் திரு பிரகாசு அவர்கட்கும் இப் பரிந்துரையை விரும்பி ஏற்று அதைத் தங்கள் கடைகளில் ஒட்ட முன்வந்த சூலூர் வட்டார மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இதனை கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்துக் கடைகளுக்கு முன்னரும் ஒட்டுவதோடு கால்நடைப் பயன்பாட்டிற்கு இம் மருந்தை அறவே தராமல் புறக்கணிக்குமாறும் மருந்துக் கடைக்காரர்களை அன்புடன் வேண்டுகிறோம். தேர்ந்தெடுத்த பயனாளிகளுக்காக ஆழ்ந்த அக்கறையுடன் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தாக்கம் எப்படி எதிரொலிக்கும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.  உண்மையான மனமாற்றமே வெற்றியைத் தரும். இதன் மூலம் பாறு கழுகுகளின் வாழ்வில் நிச்சயம் நம்பிக்கைக் கீற்று விழும்.

மனோஜ் பற்றி…

திரு. மனோஜ் அவர்கள் சென்ற கோடை விடுமுறையின் போது குடும்பத்துடன் மாயாறுக்கு சுற்றுலா வந்தபோது பறவையாளரும் ஓவியருமான சிவக்குமார் அவர்கள் வரைந்த  பாறு கழுகு படத்தின் அருகில் நின்று செல்பி எடுத்து அனுப்பி என்னை ஆச்சரியமூட்டியிருந்தார். இவருக்கு அருளகம் சார்பாகவும் பாறு கழுகு அன்பர்கள் சார்பாகவும் திரளான நன்றியினை உரித்தாக்குகிறோம்.

கால்நடைகளுக்கு வரும் நோய்கள் குறித்தும் பாறு கழுகுகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வுக் கூட்டம்

மழைக்காலங்களில்  கால்நடைகளுக்கு வரும் நோய்கள் குறித்தும் பாறு கழுகுகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வுக் கூட்டம் சத்தியமங்களம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலைமலையில் அருளகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. திறந்தவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் எளிய முறையில் நாட்டு மருத்துவம்  குறித்து எடுத்துக் கூறுவதற்காக யுவர்பார்ம் நிறுவனத்தைச் சேர்ந்த திரு.ரகு அவர்கள் வருகை புரிந்தார்.

மாவநத்தம்,பெஜலட்டி,தடசலட்டி ஆகிய கிராமங்களுக்குச்  சென்று அங்குள்ள கால்நடை வளர்ப்போரைச் சந்தித்து கால்நடைகளுக்கு வரும் நோய்கள் பற்றிக் கேட்டறிந்தோம்.  கால்நடைகளுக்கு உண்ணி, மடிவீக்கம், அம்மை போன்ற நோய்கள் வருகின்றன என்று தெரிவித்தனர். அதற்கு எளிய முறையில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி மருந்து தயார் செய்வது என்பது குறித்தும் நோய் வராமல் தடுக்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் குடல் புழு தாக்கிய கால்நடைகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்பது குறித்தும் குடல்புழு நீக்கம் செய்யவேண்டியதன் அவசியத்தையும் ரகு அவர்கள் எடுத்துரைத்தார்.

மேலும் கால்நடைகள் கட்டப்பட்டு இருக்கும்  கட்டுத்துறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதன் மூலம் மடிவீக்கம் வராமல் தடுக்க முடியும் என்றார்.

அருளகத்தின் செயலார் திரு.பாரதிதாசன், மாடுகளுக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதுண்டா என்று பங்கேற்பாளர்களைக் கேட்டபோது,  நோய் வந்தால் மருத்துவரை அழைப்போம் என்றும் மருத்துவர் வருவதற்குத்  தாமதமானால்  தாங்களே நாட்டு வைத்தியம் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறினர். இறந்த மாடுகளின் சடலத்தை என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது சிலர் புதைத்துவிடுவோம் என்றும் சிலர் அப்படியே விட்டுவிடுவோம் என்றும் கூறினர். கால்நடைகள் புலி தாக்கி இறந்தால் அதற்குரிய இழப்பீடு பெற்றுள்ளீர்களா என்றும் கேட்டபோது, சிலர் வாங்கியுள்ளதாகவும் சிலர் கிடைக்கவில்லை என்றும் பதில் கூறினர். அவர்களிடம் பதிலைப் பெற்றுக்கொண்ட பின்னர், பாறு கழுகுகளின் சூழல் முக்கியத்துவம் குறித்தும் தாங்கள் தெரிந்தும் தெரியாமலும் தரும் மருந்துகளால் ஒரு உயிரினமே வாழ்வா சாவா என்று வாழ்ந்து வருவதாகவும் பாறு கழுகுகளைக் காக்க உங்களது ஒத்துழைப்பு அவசியம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.  அக்கூட்டத்தில் பெரியவர் ஒருவர் இந்த விழிப்புணர்வு ஒரு நாள் மட்டுமே போதாது என்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசுத்துறை உள்ளிட்ட தனியார் அமைப்புகளும் இப்படி ஒரு நாளில் போகிறபோக்கில் சொல்லி விட்டுப் போவதில் பயனில்லை என்றும் கூறினார். அதற்குப் பதிலளித்துப்பேசிய சு. பாரதிதசான், தற்போது உங்கள் ஊரிலிருந்தே இரண்டு நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம் என்றும் அவர்கள் உங்களுடன் அடிக்கடித் தொடர்பில் இருப்பார்கள் என்றும் கூறினார். கால்நடையிலிருந்து கிடைக்கும் பாலை மதிப்புக் கூட்டி வெண்ணெய், நெய், தயிர், மோர் என  மாற்றுவது குறித்தும்  சாணத்திலிருந்து மண்புழு உரம், ஊதுபத்தி, திருநீர், மற்றும் எருவாட்டி ஆகியவற்றைத் தயார்படுத்தி உங்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று அருளகத்தின் உயிரியலாளர் செல்வி சுந்தரி எடுத்துரைத்தார்.

அருளகத்தின் சமூகப் பணியாளர் செல்வி ரேவதி அவர்கள் பாறு கழுகுகளின் அவசியம் குறித்து  எடுத்துரைத்தார். பாதுகாப்பான மாற்று மருந்துகள் எவை என்பது குறித்தும் தடை செய்யப்பட்ட மருந்துகள் எவை என்பது குறித்தும் அருளகத்தின் ஆராய்ச்சியாளர் சர்மா அவர்கள் எடுத்துக் கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேபி ஷாலினி செய்திருந்தார்.

Awareness event on Monsoon Livestock Diseases & Vulture Conservation

To raise awareness about livestock diseases during the monsoon season and the importance of protecting vultures, Arulagam organized an outreach event at Thalaimalai within the Sathyamangalam Tiger Reserve. Mr. Raghu from YourFarm invited as a special guest.

We visited the villages of Mavanantham, Bejalati, and Thadachalati, where we interacted with local cattle breeders about the diseases affecting their herds. They reported issues such as ticks, mastitis, and measles. Mr. Raghu demonstrated how to prepare simple remedies using common ingredients from an "anjarai petti" (traditional box of spices). He also provided guidance on disease prevention, identifying animals with intestinal worms, and the importance of regular deworming. Additionally, he emphasised the need for keeping cattle sheds clean to help prevent mastitis.

When Mr. Bharathidasan, the secretary of Arulagam, asked the participants if they would use traditional medicine for their cows, they responded that they would consult a veterinarian if their cattle fell ill. However, if the vet did not come, they would then use traditional remedies themselves. Regarding the disposal of dead cattle, some participants said they would bury the carcasses, while others preferred to leave them as it is. When inquired about compensation for animals killed by tigers, some reported having received compensation, while few had not.


After receiving their responses, Mr. Bharathidasan discussed the ecological importance of vultures and emphasized that the use of certain medicines can impact these species, either directly or indirectly. He stressed the need for ongoing cooperation to protect vultures. One elder at the meeting suggested that awareness efforts should extend beyond a single day and be conducted at least every three months, criticizing both private organizations and government departments for their lack of sustained action. Mr. Bharathidasan responded that Arulagam has now hired two local representatives who will maintain regular contact with the community.
Biologist Ms. Sundari from Arulagam highlighted the potential for economic benefits by adding value to cattle milk, such as producing butter, ghee, curd, and buttermilk. She also suggested exploring business opportunities through the preparation of vermicompost, incense sticks, thiruneer (holy ash), and eruvati from cow dung.


Arulagam's social worker, Ms. Revathi, discussed the importance of a healthy vulture population. Researcher Mr. Sharma explained safe alternatives to banned drugs. He emphasised to use safe drugs meloxicam and tolfenamic acid.Ms. Baby Shalini coordinated the event arrangements.

A total of 55 people from Thottapuram, Thalamalai, and Kodipuram participated in the event, including 21 men and 34 women.

Skill development training for Arulagam's Staff (2nd & 3rd August 2024)

02-08-24

Mr. Karthika Rajkumar, President, Arulagam, welcomed the newly recruited staff and handing them their appointment letters. The new staff members in the administration include Mr. Saravanan M.Com., Ms. Sivaranjani M.S.W., and Ms. Nilitapriyatharsini M.B.A.

He also emphasized on staff welfare and instruct to arrange insurance, ESI, and PF for the staff.


03-08-24

Skill development training for Arulagam’s staff engaged in vulture conservation research and fieldwork was held today at our office in Thudiyalur. Research scientist Dr. G Christopher, from Mahatma Gandhi University, Kottayam, was the special guest. 

Dr. Christopher delivered a presentation detailing the scientific work required, highlighting existing gaps, and suggesting areas for improvement in vulture conservation efforts. It is noteworthy that he was instrumental in the initiation of the Vulture conservation work being carried out by Arulagam in Tamil Nadu state.

Mr. K. Mohanraj reviewed the progress of the work conducted by Arulagam to date and outlined the future steps required for continued success. He also provided the staff with essential tools along with instructions on their usage.




02-08-24

அருளகத்தின் தலைவர் திரு. கார்த்திகா இராஜ்குமார் அவர்கள் அருளகத்தின் நிர்வாகப் பணியில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டுள்ள திரு. சரவணன், M.Com.,  செல்வி சிவரஞ்சனி M.S.W.,  செல்வி நிலிதாபிரியதர்சினி M.B.A., ஆகியோருக்குப் பணி நியமண ஆனைகளை வழங்கினார். அத்துடன் பணியாளர்கள் அனைவருக்கும் காப்பீடு, இஎஸ்ஐ, பிஎப் செய்வது குறித்தும் உடனே நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.


03-08-24

பாறுக் கழுகுகள் ஆராய்ச்சியிலும் களப்பணியிலும் ஈடுபட்டுவரும் அருளகத்தின் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று துடியலூரிலுள்ள அருளகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோட்டயம் மகாத்மாக காந்தி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த களஅறிவியலாளர் முனைவர் ஜி. கிறிஸ்டோபர் அவர்கள் கலந்துகொண்டு பாறுக் கழுகுகள் தொடர்பாக அறிவியல் அடிப்படையில் செய்யவேண்டிய பணிகள், விடுபட்ட பணிகள், மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து செயல் விளக்கமளித்தார். இவர் தமிழ்நாட்டில் அருளகம் மேற்கொண்டுவரும் பாறுக் கழுகுப் பணிகளுக்குத் தொடக்கப் புள்ளியாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு கொ. மோகன்ராஜ் அவர்கள் இதுவரையிலும் அருளகம் சார்பாக மேற்கொண்ட பணிகளைத் திட்ட மதிப்பாய்வு செய்து இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்துப் பட்டை தீட்டினார். அத்துடன் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகளையும் வழங்கி அவற்றைப் பயன்படுத்தும் முறைபற்றியும் விளக்கமளித்தார்.

அலையாத்திக் காடுகள் (Mangrove Day) நாள்  விழா 


ஜீலை 26 இன்று அலையாத்தி காடுகள் நாள் முன்னிட்டு அலையாத்தி மரக்கன்றுகள் நடும் விழா அருளகம் அமைப்பின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில் வனத்துறை வழிகாட்டுதலுடன் பாம்பன் மக்கள் பங்கேற்புடன் குந்துக்கால்  (Kunthukkal) பகுதியில்  கடைபிடிக்கப்பட்டது. 

இதன் முக்கிய நிகழ்வாக அலையாத்தி மரக்கன்றுகள் நடும் பணியினை திரு ஜெகதீசு பகான். (Jagadesh Bagan) ஐ.எப்.எஸ் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன்  முன்னிலை வகித்தார். 
இந்த நிகழ்வில் திரு. மகேந்திரன், வனச்சரகர், மண்டபம், மேற்பார்வையில் 600 அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன. 

திருமதி, லலிதா பிரகாசு, முதல்வர், கோமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப்பள்ளி (Kaumaram Sushila International Residential School) , திரு நிஜாம் முகைதீன், குருசடைத் தீவு சூழல் சுற்றுலா நிர்வாகி (Eco development Committee)  மற்றும் குழுவினர், திரு முருகேசன், தங்கச்சிமடம் பஞ்சாயத்து உறுப்பினர், திருமதி.சரஸ்வதி அவர்கள், பசுமை இராமேசுவரம் (Green Rameswaram) திட்ட நிர்வாகி,   திரு.இளையராஜா, மருத்துவர், (பாலாஜி மருத்துவமனை & மக்கள் நல அறக்கட்டளை Education and health Development Trust), திரு.சிக்கந்தர்-நிறுவனர், தீவு தன்னார்வலர் அமைப்பு (Island Protection Committee), திருமதி ரேஞ்சலின், மக்களுக்கான முன்னேற்ற அமைப்பு (People Action for Development) , மற்றும் தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சி இயக்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு அலையாத்தி மரங்களை நட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.  

நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக கோமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப்பள்ளி மாணாக்கர்கள் 45 பேர் கலந்துகொண்டு அலையாத்தி மரங்களை நட்டதுடன் கடலோரத்தில் தூய்மைப் பணியினையும் மேற்கொண்டனர்.  

அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில் மக்கள் பங்கேற்புடன்  மணல்மேடுகள் பாதுகாப்புத் திட்டத்தினை  ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித்திட்டம் (UNDP- SGP) உதவியுடன் டெரி  (Tata Energy Research Institute) அமைப்பின் மேற்பார்வையில்  மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடன்  முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.      

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அருளகம் அமைப்பின் சார்பாக திட்டத்தின் அலுவலர்கள் திரு.நடராஜன், திரு.முஹம்மது சாகித் மற்றும் திரு.கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்டோர் அனைவரும் மணல்மேடுகள்  மற்றும் அலையாத்தி காடுகளைப் பேணிப் பாதுகாப்பது தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.   நடப்பட்ட மரங்களைப்  பாதுகாப்பது தொடர்பாக  மணல்குன்றுகள் பாதுகாப்புக் குழுவினருடனும்   சூழல் பாதுகாப்புக் குழுவினருடனும் வனத்துறையினருடன் கலந்தாலேசிக்கப்பட்டது. இளங்கன்றுகளில் பாசி படர்வது, பாசி சேகரிக்கும் வாகனங்களால் சேதமுறுவது,  மனிதர்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கிப் போடுவது ஆகியன குறித்து கவனப்படுத்தப்பட்டது. இதனைத் தவிர்க்க வேண்டிய முறைகளும் கவனப்படுத்தப்பட்டது.


மேலும் அலையாத்திக் காடுகள் நாளையொட்டிப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அருளகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக ம.சா. சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையில் கோயம்புத்தூர் கொமாரம் சுசிலா சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்றது.   இவ்விழாவில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்டப்பணியாளர் திரு. கெவின் குமார் அவர்கள் கலந்துகொண்டு கடல் வாழ் ஊயிரினங்களையும் குறிப்பாகப் பவழப்பாறைகளையும் பாதிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கிழிந்த வலைகளையும், கடல்பகுதியிலிருந்து அகற்றும் பேய்வலைத் திட்டம் குறித்து விளக்கமளித்தார்.  இதன்மூலம் சுமார் 400 கிலோ நெகிழிப் பைகள், கிழிந்த வலைகள், பாட்டில் உள்ளிட்டக் குப்பைகள் குந்துக்கால் கடற்கரையை ஒட்டிய மணல்மேடு பகுதியில் சேகரிக்கப்பட்டது. மாணவர்களை குருசடைத்தீவுக்கு அழைத்துச் சென்று கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும், கால நிலைச் சீர்கேடு குறித்தும், பவழ  உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடந்து மக்கள் பங்கேற்புடன் மணல்மேடுகளைப் பாதுகாக்கும் அருளகத்தின் திட்டப் பெயர்ப் பலகையை கொமாரம் சுசிலா சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி முதல்வர் திருமதி லலிதா பிரகாஷ், அவர்கள் திறந்து வைத்தார்.  மண்டபம் சரக வன உயிர்க்கோளப் பாதுகாப்பு வனச் சரகர் திரு.மகேந்திரன், அவர்கள் நிகழ்வுக்கு முன்னிலை வகித்து கடல் ஆமைகள் குறித்து உரையாற்றினார். தூய்மை இராமேசுவரம் அமைப்பைச் சேர்ந்த திருமதி சரஸ்வதி அவர்கள் பாடலுடன் கூடிய விழிப்புணர்வை கொமாரம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். இதில் மாணவர்களுடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய அருளகம் அமைப்பின் செயலாளர் திரு சு. பாரதிதாசன் அவர்கள் அலையாத்திக் காடுகளும் மணல் குன்றுகளும் சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்றுத் தெரிவித்தார்.  மேலும் குடிநீரின் தரம் உவர்ப்பாகாமல் காக்கும் அற்புதமானப் பணியினை மணல்குன்றுகள் செய்கின்றன என்றும் சுனாமி போன்ற பேரிடர்களைத் தடுப்பதிலும் மீனவர்கட்கு வாழ்வாதாரத்தை வழங்குவதிலும் அலையாத்திக் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன எனவும் தெரிவித்தார்.
அருளகம் அமைப்பின் நெய்தல் நாற்றுப்பண்ணைக்கு திரு ஜெகதீசு பகன், இ.வ.ப., அவர்கள் வருகை புரிந்து  அங்கு மணல்குன்றுகளுக்கு ஏற்றதாக வளர்க்கப்பட்டு வரும் நாற்றுக்களின் வளர்ச்சி குறித்துப் பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குத் தேவையான ஒத்துழைப்பை பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவி திருமதி அகிலா பேட்ரிக்   வழங்கினார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் அருளகம் அமைப்பின் திட்ட அலுவலர் திரு.நடராஜன் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சியின் நிறைவில் அருளகம் அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் நன்றி கூறினார்.

Page 10 of 24

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Reach Us