Arulagam City Nature Challenge walk
Date : 29.04.2023
Time: 7.00 am to 10.am
Place: Krishnampathi lake
Location link: https://goo.gl/maps/APqJUfa4s8VdKPKf7
Contact: Karthikeyan R
9943931482

Article Published in the BNHS magazine : "Hornbill"
In Tamil Nadu, Arulagam, a SAVE Partner, is engaged in setting up a Vulture Safe Zone (VSZ) for the state. Arulagam was established in 2002 to echo the voice of the voiceless and protect threatened flora and fauna by involving targeted stakeholders through participatory action programs.
நாற்றுப் பண்ணை அமைப்பு
ஏப்ரல் 7. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் செயல்படும் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த 20 மகளிர்களுக்கு அருளகம் சார்பில் நாற்றுப் பண்ணை அமைப்பது மற்றும் நாற்று உற்பத்தி செய்வது எப்படி என்பது குறித்துத் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சமுதாய. தொழில்சார் வல்லுனர் திருமதி சந்திரா அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். நாற்றுகள் உற்பத்தி செய்தலில் விதை சேகரிப்பு, விதை நேர்த்தி, தாய்ப் பாத்தி அமைப்பு, மண் கலவை முறை மற்றும் விதை நடுதல், தண்ணீர் தெளிக்கும் முறை குறித்து அருளகத்தின் சார்பில் திருமதி கவிதா அவர்கள் விளக்கமளித்தார். அருளகம் செயலர் சு.பாரதிதாசன் நாற்றுப்பண்ணைக் கருவிகள் பராமரிப்பு பண்ணை நிர்வாகம் குறித்து விளக்கினார். அருளகத்தின் பொருளாளர் அமிர்தலிங்கம் அவர்கள் நாற்று பண்ணை வாழ்வதாரத்திற்கான தொழில்சார் முறையாக. மேற்கொள்வது குறித்து விளக்கமளித்தார்.

காட்டின் குரல் - புத்தக விமர்சனம்
திரு. பா.சதீஸ் முத்து கோபாலின் "காட்டின் குரல்" புத்தக விமர்சனம்.
விமர்சனத்தை படிக்க இங்கே சொடுக்கவும்
மிகவும் உணர்வுப்பூர்வமாக அருமையாக எல்லோரையுமம் ஈர்க்கும்படி எழுதப்பட்டு இருந்தது. இதுவரை யாரும் இந்த நூலை இப்படி விமர்சித்து நான் வாசித்ததில்லை. உங்கள் எழுத்து என்னைப் பெருமைப்பட வைக்கிறது. மட்டற்ற நன்றி உங்களுக்கு
-சு.பாரதிதாசன்
Trident Pneumatic's Donation
கோயமுத்தூரிலிருந்து இயங்கி வரும் ‘ட்ரைடென்ட் நுமாடிக்’ நிறுவனம் அருளகத்திற்கு 5 இலட்சம் நன்கொடை வழங்கியுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமது நிறுவனத்தின் சமூக பொறுப்பின் கீழ் இந்தத் தொகையை வழங்கியமைக்காக திருமதி சரஸ்வதி நடராஜன் அவர்களுக்கும் திரு கே.எஸ். நடராஜன் அவர்களுக்கும் அருளகம் தமது திரளான நன்றிகளை உரித்தாக்குகிறது. இத்தொகையைச் சரியான முறையில் பாறுக் கழுகுகளின் மேம்பாட்டிற்கு மக்களுடன் இணைந்து களப்பணியாற்றப் பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கிறோம்.
Cascade training
Day 1 (15-03-2023)
Namakkal District
Cascade training on BMW for the doctors of the Namakkal District Health Service Centre was conducted on 15-03-2023.
Mr. Amithalingam, Arulagam, explained the BMW Rules and laws. Further, he organised an activity-based training on the segregation of BMW.
Mr. Mani, the trainer, highlighted the need for the safe disposal of Biomedical wastes, using a Powerpoint.
Mr. John emphasised the do's and don’ts of handling the BMW and he also sensitised to avoid pilferage during intra-mural and extra-mural transportation.
Suggestions and feedback were collected from the participants. We witnessed enthusiastic participation among the participants.
Training for other target audiences viz., staff nurses, health workers and lab technicians will continue till 18 March 2023 Saturday.
Report by Arulagam.
15 March 2023

12th Annual SAVE Meeting
பாறுக் கழுகுகள் பாதுகாப்பிற்கென ஒருங்கிணைக்கப்படும் 12வது ஆண்டுக் கூட்டம் நேபாள நாட்டில்
நாவல்பூர் மாவட்டத்திலுள்ள சித்துவான் தேசியப்பூங்காவில் கடந்த மூன்று நாட்களாக (9 லிருந்து 11 -3- 2023) வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேசு, மியான்மர், கம்போடியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பாறுக் கழுகுகள் தொடார்பாக ஆராய்ச்சியிலும் பாதுகாப்பிலும் ஈடுபட்டுவரும் 45க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை நேபாள பறவைகள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைத்தது.
இதில் அருளகம் சார்பாக நானும் பேச அழைக்கப்பட்டேன். எனது உரையில் வெவ்வேறு தரப்பு மக்களிடம் எவ்வாறு அருளகம் களப்பணியாற்றி வருகிறது என்பதை எடுத்துரைத்தேன். அத்துடன் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டு அரசால் எடுக்கப்பட்டக் கொள்கை முடிவுகளையும் குறிப்பிட்டேன். அருளகத்தின் முன்னெடுப்புகளையும் தமிழ்நாட்டு அரசின் முன்முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முத்தாயப்பாக உலகிலேயே பாறுக்கழுகுகளுக்கான முதல் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக சித்வான் பகுதி அறிவிக்கப்பட்டது. இப்பகுதியை மக்கள் பங்கேற்புடன் பாதுகாக்கப்ட்ட பகுதியாக உருவாக்கத் தன்பகதூர் சவுத்ரி மற்றும் கிறிஸ்னா பூசல் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் வெளிப்பாடாக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பாறுக் கழுகுகள் பறக்கவிடப்பட்டன. நிகழ்வில் ‘பாறுக் கழுகுகளைத் தேடி’ என்ற எனது நூலையும் வழங்கினேன்.எனது புத்தகத்தின் முகப்புரையில் தன்பகதூர் சவுத்ரி மற்றும் கிறிஸ்னா பூசல் ஆகிய இருவர் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கும் புத்தகத்தைக் காணிக்கையாக்கி இருப்பதைத் தெரிவித்தபோது நெகிழ்ந்துபோயினர். நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டார். சேவ் அமைப்பின் பொறுப்பாளர் ரைஸ்கீரீன் மற்றும் மேற்பார்வையாளர் கிறிஸ்பௌடன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தமிழ்நாட்டிலும் பாறுக் கழுகுகளுக்கென பாதுகாக்கப்பட்ட மண்டலம் ஒன்று உருவாக வேண்டும். அதை நோக்கி அருளகம் உங்கள் அனைவரது ஆதரவோடும் முன்னெடுக்கும்.

Jharkhand Visit
ஜார்கண்டு மாநிலத்தின் மல்லுயிர் வகைமை வாரியத்தின் தலைவர் திருமிகு ரவி சிங்கால் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து வரும் பிப்ரவரி 10 அன்று ஜார்கண்ட்டு மாவட்ட வன அலுவலர்களிடம் பாறுக் கழுகுகள் பாதுகாப்பு குறித்து உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் அழைத்த பொழுது நான் முதுமலையில் களப்பயணத்தில் இருந்தேன். அவர்தம் அழைப்புக்கு நன்றியும் மகிழ்ச்சி தெரிவித்தேன். மேலும் ஜார்க்கண்ட்டு மாநிலத்தில் பாறுக் கழுகுகள் பாதுகாப்புக்காக வேலை செய்துவரும் நியோஹூமன் பவுண்டேசன் நிறுவனரான முனைவர் சத்யபிரகாசு அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் என்னை விடப் பொருத்தமானவராயிருப்பார் எனவும் கூறினேன்.
உங்கள் செயல்பாடு குறித்து வாசித்தறிந்தேன்.நீங்கள் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த பணி ஆற்றிவருவதப் பற்றிக் கேள்விப்பட்டேன். அதை இங்குள்ள வனத்துறை அலுவலர்களிடம் பகிர்ந்து கொண்டால் உந்துதலாய் இருக்கும் என மறுமொழி கூறினார். ஒருபுறம் அவர் அழைப்பு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தாலும் மறுபுறம் உள்ளூரில் ஒருவர் இருக்க என்னை மட்டும் அழைத்தது என்னைத் தர்ம சங்கடத்துக்கு ஆட்படுத்தியது.
‘ஜார்க்கண்டு’ என்ற சொல்லுக்குக் காட்டு நிலம் எனப் பொருள். ஜார்க்கண்டு மாநிலத்திற்குச் செல்வது எனக்கு இது முதல்முறைப் பயணம். ஜார்க்கண்டு மாநிலப் பழங்குடியினர் குறித்தும் பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டா அவர்கள் குறித்தும் இருபது ஆண்டுகட்கு முன்னர் வாசித்திருக்கிறேன். ஆங்கிலேயர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு எதிராக வில் அம்பைக் கொண்டு போராடியது குறித்துப் படித்து நெகிழ்ந்திருக்கிறேன். அதேபோல ஜார்க்கண்டு மாநிலத் தலைநகரான ராஞ்சி என்ற பெயர் எனக்குப் பள்ளிக் காலங்களில் ராஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் அறிமுகமாகியிருந்தது. இப்போது தான் அந்த மண்ணைத் தொடும் வாய்ப்புக் கிடைத்தது.
இந்தக் கருத்தரங்கமானது பல்லுயிர் வகைமைச் சட்டத்தைத் மாநிலத்தில் திறம்படப் பயன்படுத்துவது குறித்தும் அதன் பயனை உள்ளூர் மக்களும் பெறுவது எப்படி என்பது குறித்தும் வனத்துறை அலுவலர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாநிலமெங்கிலிருந்தும் 40க்கும் அதிகமான வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருமிகு L.Khiangte கூடுதல் தலைமைச் செயலர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, இளைஞர்களிடம் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் ஒவ்வொரு நாளும் காட்டுப் பகுதியைப் பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கோரி கடிதம் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் வனத்துறைக்கு அழுத்தம் தரப்படுவது குறித்தும் வருத்தமுடன் குறிப்பிட்டார். அவர் உரையைத் தொடங்கும்போது தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த எனது பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டார். பல்லுயிர் வகைமை வாரியத் தலைவர் திருமிகு ரவி சிங்கால் நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைமை வனப்பாதுகாவலர் திருமிகு சஞ்சய் சீரிவத்சா அவர்கள் தொடக்க உரையாற்றினார். கூட்டத்தில் ஓய்வு பெற்றத் தலைமை வனப்பாதுகாவலர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பல்லுயிர் வகைமைச் சட்டத்திலுள்ள வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இன்னும் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியது குறித்தும் திருமிகு சீனிவாச மூர்த்தி அவர்கள் கவனப்படுத்தி உரையாற்றினார்.
எனது உரையினை உள்ளூர்ப் பழங்குடி மொழியில் ’ஜோகார்’ என வணக்கம் கூறித் தொடங்கினேன். அவர்களுடன் தமிழ் நாட்டில் வனத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு அருளகம் மேற்கொண்டு வரும் பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் உள்ளூரில் பாறுக் கழுகுப் பாதுகாப்பிற்காக வேலை செய்துவரும் நியோஹூமன் பவுண்டேசன் நிறுவனர் சத்யப்பிரகாசு அவர்களைப் பற்றியும் மறக்காமல் குறிப்பிட்டேன்.
பாறுக் கழுகுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக வாலிபால் போட்டி நடத்தி வருவதைக் குறிப்பிட்டு நீங்கள் உங்கள் பகுதிக்குப் பொருத்தமாகக் கிரிக்கெட் போட்டி நடத்தலாம் எனவும் மண்ணின் மைந்தரான கிரிக்கெட் புகழ் திரு தோனி அவர்களை அதற்குத் தூதுவர்களாகப் பயன்படுத்தலாம் எனவும் எனது உரையில் குறிப்பிட்டேன். மேலும் அண்மையில் ஜார்க்கண்டு மாநில முதல்வர் அவர்கள் மாண்புமிகு இந்திய அரசின் தலைமை அமைச்சருக்கு எழுதியக் கடிதத்தை எடுத்துக் காட்டி அதில் பழங்குடியினர் நலம் பாதிக்கப்படுவது குறித்துச் சுட்டிக் காட்டி எழுதியமைக்காக எனது தனிப்பட்ட வாழ்த்தையும் தெரிவித்தேன். என்னை உரையாற்ற அழைத்தமைக்காக நன்றியும் தெரிவித்தேன்.
அடுத்தநாள் களப்பயணமாக ஹசாரிபாக் எனும் மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். வழியெங்கும் முருக (இலைப்பொரசு) மரங்களும் மஞ்சள் இலவு மரங்களும் பூத்துக் குலுங்கின. கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. என்னுடன் காட்டுயிர் நிறுவனத்தில் ஆய்வாளராக இருக்கும் இளைஞர்கள் தீபக்கும் விக்னேசும் கலந்து கொண்டனர். அவர்களிடம் உரையாடியது எனக்கு உற்சாகமாய் இருந்தது. சத்யபிரகாசு அவர்கள் அதிகாலையில் என்னை அழைத்துச் சென்று பாறுக் கழுகுகள் முன்னர் கூடமைத்திருந்த தைல மரத்தைக் காட்டினார். அம்மரங்களை வெட்ட முயற்சித்தது குறித்தும் அதைத் தடுக்கத் தான் மேற்கொண்ட முயற்சி குறித்தும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அடுத்ததாக பாறுக் கழுகுகள் பனை மரத்தில் கூடமைத்திருந்ததைக் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் அலைந்தும் பாறுக் கழுகுகள் ஏதும் தென்படவில்லை. ஆயினும் வேறு வகைப் பறவையினங்கள் புதிதாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஹசாரிபாக் மேற்கு மண்டலத்தின் வன அலுவலர் திருமிகு ஆலம் அன்சாரி அவர்களைச் சந்தித்து எனது பயணத்திற்கு உதவியமைக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தேன்.
ராஞ்சி செல்லும் வழியில் குப்பைக் கிடங்கின் அருகில் வண்டியை நிறுத்தச் சொன்னேன். அங்கு காலாவதியான மாத்திரைகள் மருந்துகள் எல்லாம் கொட்டப்பட்டுக் கிடந்தன. குப்பைக் கிடங்கில் மைனா, வாலாட்டி, கொக்கு, சிட்டுக்குருவி, கரும்பருந்து ஆகியன இரை தேடியபடி இருந்தன. இந்த மருந்துகள் எல்லாம் மழை பெய்யும்போது தண்ணீரில் அடித்துச் சென்றால் அதைப் பறவைகளும் விலங்குகளும் குடித்தால் என்னாகுமோ என்ற அச்சம் மேலிட்டது. கடந்தவாரம் இதேபோல மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்ட செய்தி நாளிதழில் வந்ததையும் இணைத்துப் பார்த்தேன்.
ஜார்க்கண்டு மாநிலம் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி. ஆயினும் மக்கள் வறுமையில் உழல்கின்றனர். நிலக்கரி, மைக்கா, இரும்புத்தாது எடுக்கும் பொருட்டுக் காட்டுப் பகுதிகள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆட்பட்டு வருகின்றன. வனவிலங்கு நடமாட்டமற்றக் காட்டுப்பகுதியாக மாறி வருகின்றன. இங்குள்ள மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு வனத்தையே நம்பியுள்ளனர். மக்கள் பங்களிப்பு இல்லாமல் அவர்களது வறுமையைப் போக்காமல் காட்டையும் காட்டுயிர்களையும் காப்பாற்ற முடியாது. இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
இன்னும் நாம் களப்பணியாற்ற வேண்டியதும் பயணிக்க வேண்டியதும் அதிக தொலைவு என்பதை உணர்ந்து திரும்பினேன்.
Page 14 of 25


