T.N. government plans synchronised vulture census across Tamil Nadu, Kerala, Karnataka
The State-level Vulture Conservation Committee (SVCC) has decided to conduct a synchronised vulture census in Tamil Nadu, Kerala and Karnataka.
The census has been planned before March as the nesting season is in progress, Chief Wildlife Warden Srinivas Reddy said.
At the SVCC’s first meeting held on 25th Jan, other conservation plans such as operationalising rescue centers in Tirunelveli, Tiruchi and Coimbatore; designating a Vulture Safe Zone (VSZ) around the Mudumalai Tiger Reserve; and future strategies were discussed. “Since this was the first meeting, there were a lot of ideas that came from different members. The only concrete decision taken was about the census,” said Mr. Reddy. Around 60 villages, 20 each in Tamil Nadu, Kerala, and Karnataka, have been identified as hotspots based on vultures' feeding and nesting areas, and areas where there is a notable cattle-carnivore conflict, said S. Bharathidasan, secretary, Arulagam, a non-profit organisation working towards environmental conservation.
Mr. Bharathidasan, who is also a SVCC member, said proposals had been made for conducting animal welfare camps, sensitising people to ethical animal husbandry, providing opportunities for sales of pesticides using cow dung. He also said that designating the VSZ would be an important step in conservation. “Vulture Safe Zone is only a concept now; it must be legalized by the government so the do’s and don’ts can be implemented,” he said.
The SVCC consists of the Director of the Department of Animal Husbandry; the Director of Drugs Control, Food Safety and Drug Administration Department; experts; and NGOs working towards vulture conservation.
Mr. Bharathidasan said steps must be taken gradually for the entire State to become a safe zone for vltures, and not just around Mudumalai. He said the Drugs Administration Department’s action against drug suppliers and manufacturers and retailers of the banned veterinary drug, diclofenac, was commendable.
Training for Biomedical Waste Management
தடுப்பூசி மையங்களில் பல்வேறு வகையான ஆபத்தான கழிவுகள் உருவாகின்றன என்பது நாம் அறிந்ததே. இந்தக் கழிவுகள் ஏனைய கழிவுகளோடு கலக்கும்போது எல்லாமே மோசமான கழிவாக மாறும் ஆபத்து உண்டு. இதனைக் களைய தடுப்பூசிமையங்களில் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து பயிற்றுநர்களை உருவாக்குவதற்கான கூட்டம் இன்றும் நாளையும் (18 & 19, ஜனவரி, 2023) தமிழ்நாடு அரசு குடும்ப நல அமைச்சகத்தின் பயிற்சியாளர் மையத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் குடும்ப நல அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் டாக்சிக் லிங்க் என்ற அமைப்பின் மேற்பார்வையில் அருளகம் அமைப்பு இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.

மஞ்சள் முகமே வருக!
‘மஞ்சள் முகப் பாறு’ எனப்படும் ‘Egyptian vulture’ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிப் பகுதியில் பாறைப் பொந்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் வசித்துவந்த செய்தியை வன அலுவலர் ஆனந்த், ஓய்வுபெற்ற வனப் பாதுகாவலர் கணேசன் ஆகியோர் என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.
தமிழகத்தில் இல்லாத நிலைக்குச் சென்றுவிட்ட மஞ்சள் முகப் பாறு, தற்போதும் அங்கு வாழ்கிறதா என்று பார்த்துவரவேண்டும் என்ற ஆவல் சில ஆண்டுகளாகவே இருந்தது. கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால், அங்கே செல்வதற்கான வாய்ப்பு தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. ஒரு வழியாக அது அண்மையில் நிறைவேறியது.

Arul's Memorial Day
அருள் நினைவு நாளை முன்னிட்டு 31 நவம்பர் 2022 அன்று, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் சூழல் குறித்து கலந்துரையாடினோம். அரிய மரங்களுக்கான நாற்றுப்பண்ணை குமரகுரு கல்லூரி வளாகத்தில் செயல்படுவது குறித்து விளக்கம் அளித்தோம். எங்களது செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருந்து வரும் குமரகுருக் கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றியினையும் தெரிவித்தோம். சுமார் 60 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர். விதை நடுவது பை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

International Lead Poisoning Prevention Week of Action
Animation Lead poisoning: four things to know about lead (available soon in Arabic, English, French, Chinese, Spanish, Russian, Bahasa).
This video statement on the occasion of International Lead Poisoning Prevention Week 2022 by Dr Maria Neira, Director at the World Health Organization of the Department of Environment, Climate Change and Health.
பாறுக் கழுகுப் பாதுகாப்புப் பணிகள்
தமிழக அரசு பாறுக் கழுகுப் பாதுகாப்புக்கெனக் குழு ஒன்றை அமைத்துள்ளதை அருளகம் அமைப்பின் சார்பாகவும் பறவை அன்பர்கள் சார்பாகவும் மனதார வரவேற்கிறோம்.
2006- இல் ஒன்றிய அரசு முதன்முதலில் பாறுக் கழுகுப் பாதுகாப்பிற்கென செயல்திட்டம் ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவுறுத்தல்கள் செயல்திட்டங்கள் சொல்லப்பட்டிருந்தன. அப்போதே மாநில அளவிலான குழு ஒன்றை அமைக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பதினாறு ஆண்டுகட்குப் பின் இது நிறைவேறியுள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காகத் தமிழக முதல்வரையும், வனத்துறை அமைச்சரையும், வனத்துறைச் செயலரையும், முதன்மை வனத்துறை அலுவலர், முதன்மைக் காட்டுயிர் பாதுகாவலர், கூடுதல் வனத்துறை அலுவலர் உள்ளிட்டோரையும் அருளகம் மனதாரப் பாராட்டுகிறது. குரலற்ற மனிதர்களுக்காக மட்டுமின்றி குரலற்ற உயிரினங்களுக்காகவும் இந்த அரசு இருக்கிறது என்பதை இது எடுத்தியம்புகிறது. வனத்துறைச் செயலர் ஆர்வமுடனும் அக்கறையுடனும் பாறுக் கழுகுப் பாதுகாப்புக்கு தமிழக அரசு என்ன செய்யவேண்டும் எனக் கேட்டறிந்தார். அவருக்கு அருளகம் சார்பாக எமது சிறப்பான நன்றியினை உரித்தாக்குகிறோம். இந்தியாவில் பாறுக் கழுகுப் பாதுகாப்பில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு அரசு இருக்கிறது என்பதைப் பலரும் பாராட்டினர். பாறுக் கழுகுகள் பாதுகாப்புக்காக உலகெங்கும் நடைபெற்றுவரும் செயல்பாடுகள் குறித்து வரும் செய்தியிலும் இதைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். இந்தப் பாராட்டெல்லாம் தமிழக அரசுக்குத் தான் சேரும். இன்னும் பல திட்டங்கள் செயல்வடிவம் பெறவேண்டும். உயிரினங்கள் பாதுகாப்பில் முன்னோடியாகத் தமிழகம் திகழவேண்டும் என்பது என் ஆவல்.
Government Order for APVC
Mr.Bharathidasan, Secretary of Arulagam, is inducted as a member of the Tamil Nadu State Action Plan for Vulture Conservation committee APVC.
In a bid to prevent the declining vulture population in Tamil Nadu, the State Environment, Forest and Climate Change department have constituted a state-level committee to take comprehensive measures for vulture conservation. In a government order dated October 19, the committee will have 10 members, including the principal chief conservator of forests and chief wildlife warden, who will act as its chairman. The committee will have experts from the Wildlife Institute of India, the Salim Ali Centre for Ornithology and Natural History, and non-governmental organizations. The committee will ensure the implementation of an action plan for vulture conservation in the State.
Committee to prevent vulture extinction formed in TN


காட்டுயிர் வாரம்
காட்டுயிர் பாதுகாப்பை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காட்டுயிர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு அருளகம் அமைப்பின் சார்பாக நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகத்திலுள்ள பொக்காபுரம், மாவினல்லா, செம்மநத்தம், எப்பநாடு ஆகிய ஊர்களில் வசிக்கும் பழங்குடிக் குழந்தைகளுடன் காட்டுயிர் வாரவிழா கடந்த 4ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை அருளகம் அமைப்பினர் வனத்துறையுடன் இணைந்து முதுமலைப் புலிகள் காப்பக இயக்குநர் திரு வெங்கடேசு மற்றும் துணைப் பாதுகாவலர் திரு. அருண்குமார் அவர்கள் வழிகாட்டுதலோடு ஒழுங்கு செய்திருந்தனர்.
அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் மாணவர்களுக்கு காட்டுயிர் கதைகளைச் சொல்லி உற்சாகப்படுத்தினார். நிகழ்வு குறித்து அவர் பேசும்போது, பாறுக் கழுகுகளின் வசிப்பிடத்திற்கு மிக அருகில் இருப்பதால் இந்த ஊர்களைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார். மேலும் பழங்குடிகளைப் பொருத்தவரை காடு, காட்டுயிர்கள் என்பது அவர்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் தொடர்புடையது என்பதாலும் பழங்குடிக் குழந்தைகளுடன் காட்டுயிர் வார விழாக் கொண்டாடுவது பொருத்தமாய் இருக்கும் என்பதாலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.

நிகழ்வில் யானை, கரடி, முயல், பாறுக் கழுகு ஆகியனவற்றைக் காகித அட்டையைக் கொண்டு முகமூடியாகச் செய்ய திரு. ஆழி வெங்கடேசன் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்தார். அவர் சொல்லித்தருவதைப் பார்த்து மாணவர்களும் அதேபோலச் செய்து பழகினர். செல்வி. ஜோன்லிண்டன் அவர்கள் இயற்கைச் சாயங்களைக் கொண்டு வண்ணம் தீட்டுவது குறித்துப் பயிற்சி வழங்கினார். மாணவர்களும் தாங்கள் உருவாக்கிய முகமூடிக்கு வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர். தாங்கள் உருவாக்கிய முகமூடிகளைத் தங்களின் தலைகளில் மாட்டி விளையாடினர்.
தற்போது பழங்குடிக் குழந்தைகளுக்கும் காட்டுக்கும் உள்ள தொடர்பு குறைந்து வருவதாகவும் இதுபோன்ற நிகழ்வு மூலம் காட்டுயிர்கள் மேல் இளந்தலைமுறையினர் நேசம் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் முனைவர் பி.ஏ. டேனியல் தெரிவிதார்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக விலங்குகளின் உருவ முகமூடியை மாட்டியபடி, ‘காப்போம் காப்போம்’, ‘காட்டுயிர்களைக் காப்போம்’, ‘காப்போம் காப்போம், பாறுக் கழுகுகளைக் காப்போம்’ என்ற முழக்கத்தை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். இதனைப் பார்த்து ஊர் மக்களும் வெகுவாக இரசித்தனர்.
நிகழ்ச்சிக்குத் தேவையானமுன்னேற்பாடுகளை மசினகுடி வனச்சரகர் திரு. என். பாலாஜி, சிங்காரா வனச்சரகர் திரு. ஜான் பீட்டர், வனவர்கள் ஸ்ரீராம், சித்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
காட்டுயிர் பாதுகாப்பு குறித்த துண்டறிக்கையினை அருளகம் சார்பாக பிரபு அவர்கள் ஊர் மக்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் வழங்கினார்.


Page 14 of 24
