மணல் மேடுகள் பாதுகாப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன | Oct 2025 Rameswaram
இன்று இராமேஸ்வரம் தீவில் இராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான கப்பல் அடியான் முனீஸ்வரர் சாமி கோவிலில் இடத்தில் நமது அருளகத்தின் மணல் மேடுகள் பாதுகாப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த இடத்தைத் மரக்கன்றுகள் நடுவதற்குத் தோதாக இந்து சமய அறநிலையத்துறை அங்கு வளர்ந்திருந்த சீமைக் கருவேல் மரங்களை அகற்றியது. இந்நிகழ்வில் இராமநாதசுவாமி கோவில் இணை ஆணையாளர் திரு க செல்லத்துரை அவர்கள்மரக்கன்று நடவு செய்து பணியை துவக்கி வைத்தார். மேலும் டாக்டர் திரு அய்யாசாமி டேனியல் அவர்களும் அறநிலைத்துறை உதவியாளர் திரு முருகானந்தம் அவர்களும் மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.


இந்த இடம் சுமார் 3000 மரக்கன்றுகள் மற்றும் 2000 பனை விதைகள் வரும் நாட்களில் முழுமையாக நடவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கடற்கரை ஓரப்பகுதியில் ஆயிரம் அலையாத்தி மரங்கள் நடவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அருளகத்தின் நாற்றுப்பண்ணை பணியாளர்கள் மரக்கன்று நடவுப் பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தனர். மரக்கன்று நடவு செய்து முடித்தவுடன் சரியான நேரத்தில் நல்ல மழை பெய்து இயற்கை நமக்கு ஒத்துழைப்பை கொடுத்துள்ளது இன்னும் வரும் நாட்களில் மீதமுள்ள இடங்களில் முழுமையாக மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
