ஆராய்ச்சியாளர் முனைவர் ஜேன் குட்டால் நிறைவெய்தினார் | 1 அக்டோபர் 2025

உயிரினங்களின் காவலர், மனிதக் குரங்கு ஆராய்ச்சியாளர் முனைவர் ஜேன் குட்டால் நிறைவெய்தினார். (தோற்றம் 3 ஏப்ரல் 1934 மறைவு 1, அக்டோபர் 2025)
தன்சானியா நாட்டில் மனிதக் குரங்குகள் வாழ்வியல் நடத்தைகள் குறித்தான ஆய்வைத் தனது பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தொடங்கினார்.
 இளங்கலை முதுகலை படிப்பில்லாமல் நேரடியாக முனைவர் பட்டத்தை பெற்ற வெகு சிலரில் இவரும் ஒருவர்.

என் மனம் கவர்ந்தவர், மாணவர்களுடன் எனக்கு பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்  கீழ்காணும்  இவரது மேற்கோளை 
அதாவது, " உயிரினத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலில் அதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் அதன் மீது நேசம் கொள்ள வேண்டும் , அதன் மீது பற்று கொண்டு அதனைப் பாதுகாக்க முன்வர வேண்டும் "
எனது உரையில் அடிக்கடிப் பயன்படுத்துவதுண்டு.

Jane goodall institute நிறுவி Roots and Shoots அமைப்பு மூலம் இளம் தலைமுறையினர் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வழி வகுத்தார்.
ஐக்கிய நாடுகள் அவையின் அமைதித் தூதுவராகவும் 2002 ஆம் ஆண்டு கௌரவிக்கப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்டதன் மூலம் பல்வேறு விருதுகளும் இவரால் பெருமை அடைந்தன.

சென்னைக்கும் ஓரிருமுறை வந்து உரையாடி இருக்கிறார்.

பல்லுயிர்ச் செழிப்பிட நாயகன் விருது பெறுவதற்காக 2016 ஆம் ஆண்டு ஹவாயில் நடைபெற்ற ஐயூசிஎன் மாநாட்டிற்குச் சென்றிருந்த  போது, இவரைச் சந்திக்க வாய்ப்பு கிட்டியது. இவரைச் சுற்றி இளைஞர்கள் கூட்டம் மொய்த்தபடி இருந்தது.கேமராக்காரர்கள் புடை சூழ இருந்தார்.

அவரது மறைவுக்கு அருளகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அவர் விட்டுச் சென்ற பணிகள் தொடர வேண்டும் அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி.

 

Bharathidasan S

 

 

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Reach Us