World Elephant Day - 12th August

யானையின் பின் செல்வோம்.,,,

மனித மனம் என்னும் காட்டில் நிலங்களுக்கும், வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் இடமிருக்கிறது. அதில் மரங்களுக்கும், விலங்குகளுக்கும் பெரிய அளவில் இடமில்லை. காடுகள் மனித வாழ்வின் ஊற்று. காடுகளின்றி வாழ்வில்லை, மழையில்லை,நீரில்லை போன்றவற்றை மனிதன் உணரும் தருணங்கள் காண இன்னும் பல நூற்றாண்டுகளைத் தாம் கடக்கவேண்டுமோ எனத் தோன்றுகிறது. மனதில் இடமில்லாதபோது, காடுகளும் இல்லாமல் ஆகிறது. எனவே காட்டின் சேதியைச் சொல்ல யானைகளும், சிறுத்தைகளும், இன்ன பிற விலங்குகளும் ஊருக்குள் நுழைகின்றன. 

அரசு நிறுவனங்களாலும், லாப வெறி முதலாளிகளாலும் பெரும் வளர்ச்சித் திட்டங்களோடு காடுகள் அழிக்கப்படுகின்றன. அதன் உயிர்ப்பன்மயம் சிதையும்போது, விலங்குகள் வாழ வழியின்றி, ஊருக்குள் நுழைகின்றன. 'ஊர்' என்பதும் முன்னொரு காலத்தில் காடுகள் தாம். அந்தக்காடுகளில் தாம், மனித, விலங்குகளின் மோதல் தொடங்குகிறது. விலங்குகள் ரயிலில் அடிபடுகின்றன, மின்சார டவர்களில் இறக்கின்றன, வேட்டையால் கொல்லப்படுகின்றன, சாலைகளைக் கடக்கும்போது விபத்திற்குள்ளாகின்றன.நகரக்குப்பைகளாலும், நோய்வாய்ப்பட்டும் மரணமடைகின்றன. ஊர்மக்களால் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அவ்வப்போது வனத்துறைக்கும் இவ்வுயிர்கள் பலியாகின்றன.

அகல ரயில்பாதைகள் காடுகளுக்குள் போடப்பட்ட பிறகு வனவிலங்குகளின் மரணங்கள் அதிகரித்துள்ளன. 2016 - ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவெங்கும் 92 புலிகள் இறந்துள்ளன. இது உண்மையிலேயே மிக அதிகம். மனிதனின் இடையூறினால் அதிகமாகவே இறந்துள்ளன. 52 புலிகள் இறந்ததற்கு நம்மிடையே முறையான காரணங்கள் இல்லை. 5 புலிகளுக்கு மேல் வேட்டையாடப்பட்டுள்ளன. 2 புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. ஒன்று தமிழகத்தில் நடந்துள்ளது.சுமாராக 5 லிருந்து 10 புலிகள் தமிழகத்தில் மட்டும் இறந்திருக்கலாம். சிறுத்தைகளும் சுமார் 10க்கு மேல் இருக்கலாம்.

யானைகளைப் பொறுத்தவரையில் எண்ணிக்கையில் தமிழகத்தில் 32 க்கும் அதிகமானவை இறந்துள்ளன. மின்சார வேலிகளல் கொல்லப்பட்டு, ரயிலில் அடிபட்டு, நோய்க்கூறுகள் அதிகமாகி, உடலில் புழுக்கள் அதிகரித்து இவை இறந்துள்ளன. கோவை, சத்தியமங்கலம், மங்களூர் ரயில் பாதைகளில் அதிகம் யானைகள் இறந்துள்ளன. விலங்குகளின் மேல் நமக்கு கரிசனம் அதிகம் இருந்தால் அடிப்படையான, வழக்கமான நடைமுறைகளை நாம் மாற்றிக் கொண்டு வனவிலங்குகளைக் காப்பாற்ற முடியும். காட்டுக்குள் வேகமாக ரயிலை ஓட்டாமலிருத்தல், முடியுமானால் யானை வழித்தடங்களில் ரயில் பாதைகளை அமைக்காமல் வேறு பாதைகளில் அமைத்தல் அவசியம். தந்தங்களின்  வேட்டைக்காக அதிகமாக ஆண் யானைகள் கொல்லப்படுவதால் ஆண், பெண் யானை சரிவிகிதம் பாதிக்கப்படுகிறது. இது யானைகளின் அடிப்படை வாழ்வியலையே புரட்டிப் போடுகிறது.

ஒரு யானை அல்லது புலியின் மரணம், காட்டிற்குள் நாம் நினைத்துப்பார்க்க இயலாத,  அளப்பரியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் இடம்பெயர்ந்தபோது மனிதனின் யானையின் பாதையிலேயே நடந்து உலகம் முழுதும் பரவினான். யானையின் சுற்றுப்பாதைகள் பல லட்சம் ஆண்டு கள் தொன்மையானவை. அதை மறந்து மனிதன் தன்னுடைய பாதையிலே யானைகள் பயணிக்க விரும்புகிறான். விளைவுகள் மிகவும் விபரீதமாக உள்ளன. வாழ்வின் அற்புத இயற்கைப் பரிணாமத்தில் மனிதனின் இயல்பு இன்று இடையூறாகப் போய் முடிந்திருக்கிறது.

கடந்த 200 ஆண்டுகளாக, மனிதனின் இயற்கை அழிவு வெறி கட்டுப்படுத்த இயலாததாக மாறி வருகிறது. காடுகளுக்குள் நடக்கும் சுரங்கச் செயல்பாடுகள், பெரும்பணக்காரர்களின் கேளிக்கை விடுதிகள், ஒற்றைப் பணப்பயிர்களான காப்பி, தேயிலை, தேக்குத் தோட்டங்கள், அதில் கொட்டப்படும் நஞ்சு ரசாயனங்கள், புதிதான சாலைகள், அதில் வேகமாக வரும் வாகனங்கள், அணைக்கட்டுக்கள், பிரம்மாண்டமான நீர்க்குழாய்கள் காட்டிற்குள் கட்டப்படும் மத, கல்வி நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளின் எல்லை மீறல்கள், மழைக்காடுகளின் மரங்களை வெட்டுதல், விலங்குகளின் வேட்டை மற்றும் காட்டை அழிக்கும் எண்ணற்றச் செயல்பாடுகள் நம் அன்றாட வாழ்வை மிகவும் சிக்கலுக்குரியதாக மாற்றியுள்ளன. நாம் பெரும் சிக்கலில் இருக்கிறோம் என்பதை அறியாதவர்களாக இருக்கும் போது, சீரழிவுகள் இன்னும் அதிகமாகின்றன. 'இவ்வுலகம் நமக்கே' என்னும் 'மனித நடுவச்சிந்தனை' (Anthropocentric) - யிலிருந்து முற்றிலும் வெளியேறவேண்டிய காலம்  இது. 

இயற்கையின் கொடையிலே அதி முக்கியமானது மனித முயற்சியின்றி அது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் தான். இதனையும் மனிதன் அனுமதிப்பதில்லை அல்லது அமைதியாக இருப்பதில்லை. ஆட்சிகளின், கட்சிகளின் சாயல்களின்றி காடுகளைப் பாதுகாக்கும் திட்டங்கள் நமக்குத் தேவை. பத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக, காட்டை வளப்படுத்தும் திட்டங்களும், காடுகளை ஒருபோதும் மனிதனால் உருவாக்க இயலாது என்ற அறிதலோடு தொலைநோக்குச் செயல்பாடுகள் நமக்கு அவசியம். ஒரு குறிப்பிட்ட மரத்திற்கோ, விலங்கிற்கோ, பூச்சிகளுக்கோ குறிப்பிட்ட சில செயல்பாடுகள் மட்டுமில்லை, மனிதனால் அறிந்துகொள்ள இயலாத அளவில்லாத செயல்பாடுகள் அங்கே நடக்கின்றன. யானைகள் என்பன வெறும் விலங்கு மட்டுமல்ல, நாம் எண்ணிப்பார்க்க இயலாத, பெரும் மரங்களின் விதைகளைக் கடத்துபவர்களாக, விதை வங்கிகளாகப் பணிபுரிகின்றன என்பதைப் போல பல ஆயிரம் பல்லுயிர்ச்செயல்கள் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உள்ளன.

நாம் செய்யவேண்டியதெல்லாம் காட்டிற்குள் நிரந்தரமாக அல்லது மிக அதிகமாக விலங்குகளும் பறவைகளும் காட்டிற்குள் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது தான்.யானை,புலி போன்ற விலங்குகள் தாண்டி நாம் அறியாத சிறு விலங்குகளும், பறவைகளும்,பூச்சிகளும் செயற்கையாக மரணமடைவது காட்டிற்குள் பெரும் இழப்பை ஏற்படுத்தும். 

வனவிலங்குகளைக் கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மிக நிச்சயம் நல்ல பலனைத்தரும். பழங்குடிகள், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடனும் அவர்களின் அறிதலுடனும் காட்டிற்குள் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவேண்டும்.எவ்விடத்தில் அதிகம் வனவிலங்குகள் கொல்லப்படுகிறதோ அங்கு அறிவியலாளர்களும்,அரசு அதிகாரிகளும் .பழங்குடிகளும் இணைந்து கவனக்குவிப்புடன் தீர்வுகளை எட்டலாம்.

'கொடிய விலங்குகளும், பயங்கரங்களும்' எனத்தொடங்கும் குழந்தைக்கதைகள் முதல், அதனையே பின் தொடரும் வணிகப்பத்திரிகை வரை, நமது எழுத்துக்களும் இதழியலும் முழுமையாக உருமாற்றம் கொண்டு காடுகளின் அளப்பரிய ஆற்றலை மக்களுக்குக் கொண்டு செல்லும் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருக்கிறோம். சமவெளி மனிதனுக்கு ஞானத்தைப் போதிக்கும் காடுகள் இல்லாதபோது, நமக்கு இப்புவியை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. நாற்பது சதவீதக்காடுகளை மீட்டெடுக்காதவரை, நம் வாழ்வு லயமானதாக இருக்கப்போவதில்லை. லாபமீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளியச் சமூக அமைப்பிலிருந்து விலகி உயர்திணை, அஃறிணை எனப்பிரிக்கத் தெரியாத காட்டுப்பழங்குடியின் மனதினை எட்டுவதே நம் இறுதி இலட்சியம். 

விகடனில் வந்தது......
ஆர்,ஆர்.சீனிவாசன்...பூவுலகின் நண்பர்கள்

பாறு செழித்தால் பாரும் செழிக்கும்

Say no to kite festival, save feathery friends

An appeal to stop the ‘Kite festival’ considering its impact on the general public & fragile ecosystem

Date: 1st August 2022

From

S. Bharathidasan,
Member, Tamil Nadu State Board for Wildlife,
Arulagam (Nature Conservancy),
4/347, NGGO Colony, Coimbatore - 641022

To

Honourable Mr M. Mathiventhan,
Minister for Tourism and Tourism Development Corporation,
Government of Tamil Nadu.
&
Dr B. Chandra Mohan E.P. (Principal Secretary to Government),
Tourism and Tourism Development Corporation,
Government of Tamil Nadu

Subject: An appeal to stop the ‘Kite festival’ considering its impact on the general public & fragile ecosystem- Reg

Respected Sir, 

We learned that the ‘Kite Flying Festival’ in Mamallapuram from 13th to 15th August 2022 is going to be conducted by the Global Media Box with the help of the Tamil Nadu Tourism Department.  
We would like to bring to your kind attention that such kite flying events cause much harm to living beings, especially human beings and birds. In this context, we would like to reiterate that even the thread used for kite flying is free from Mancha will be hazardous to human beings and birds as well. We recall with dismay and sorrow that at Chennai during 2007, a 2-year-old child and an engineer in 2017 were trapped in a 'Mancha' kite flying twine and died. We would also like to mention that the act of selling kite twine was banned and the rope sellers were arrested by the Chennai Police.

Say no to kite festival

Another example is in front of our eyes where many birds are affected by way of kite flying festivals held in the state of Gujarat. Every year in January, the Kite Flying Festival is held in Gujarat with much fanfare. The field observation shows that every year during the kite flying festival, thousands of birds are injured and hundreds of birds are killed by invisible kite twine and threads. Even the ripstop nylon is hazardous to birds. When will the festivals we celebrate become compatible with nature? Should our celebrations upset other creatures? We want to raise the question on behalf of voiceless creatures. It has been revealed that at least 30 species of birds are affected every year. It includes endangered birds such as,

1) Vulture - Critically endangered
2) Saras crane - Critically endangered
3) Ibis 
4) Black kite
5) Painted stork
6) Pelican

Even with the best veterinarians available from all over the world, many birds die in such events. Tragically, the birds that do survive spend the rest of their lives crippled and suffering from affected legs and wings. In this month of August in which kite flying happening in Mamallapuram, the below-mentioned birds migrate locally and we fear that the birds will face serious harm.

1) Spot-billed Pelican (Near Threatened)
2) Painted Stork
3) Grey-headed Swamphen
4) Common Coot

We also want to bring to your attention that apart from the above-mentioned bird many types of seabirds will also be affected because a kite flying event is going to be held in the coastal areas. Moreover, the proposed area also comes under the Central Asian Flyway. And we would also like to point out that ‘Pallikaranai Marshland” has recently been included in the 'Ramsar Convention' list as recommended by the Government of Tamil Nadu and it is only 40 km away from the venue of the kite flying event.

There is no doubt that this kite flying event will add fuel to the threats faced by bird life which is already in question due to pesticides, industrial waste, water pollution, habitat loss, climate destruction, painkillers administered to livestock, and poisoned dead cattle. 

Moreover, we fear that the Government of Tamil Nadu, which made the world look back by holding the Chess Olympiad at Mamallapuram will be seen as being against nature by many because of this kite flying event which is to be held in the same town.

Our traditional games are many. Please find an alternative event which is compatible with nature and the birds. We hereby request that Tamil Nadu should protect its distinctiveness. Hence, we request you to cancel the said event in the interest of birds and humans alike. We hope firmly that our Government of Tamil Nadu will be supporting the voiceless organisms too.

Thanking you.

With regards,

S. Bharathidasan, Member, State Wildlife Board, Government of Tamil Nadu & Arulagam, 

Tamil Birders Group, Mr P. Jaganathan, Pavalar Ara. Selvamani, Writer, Dr T. Ramakritinan, Mr Selva Ganesh, Mr Mac Mohan, Mr A. M. Amsa,  Mr Sakthivel of SEWA, Bird Researcher Ms. Kripanandini, Mr Deepak Venkatachalam of Sulal Arivom

Ref:

https://indianexpress.com/article/cities/ahmedabad/gujarat-kite-strings-kill-214-birds-injure-over-4000-in-last-five-days-5026166/

https://www.indiatimes.com/trending/social-relevance/while-kite-strings-killed-150-birds-in-gujarat-odisha-village-voluntarily-stops-using-them-to-save-birds-504847.html

https://wildlifesos.org/animals/manjha-menace-bird-injuries-on-the-rise-due-to-kite-flying/

https://weather.com/en-IN/india/environment/news/2020-10-07-bird-injuries-on-the-rise-and-kite-flying-thread-manja-is-to

https://www.siasat.com/chinese-manja-used-kite-flyers-major-threat-birds-1793421/

https://www.newindianexpress.com/cities/bengaluru/2020/jan/16/kites-fly-high-but-manja-injures-12-birds-2090147.html

https://www.theguardian.com/environment/2015/jan/14/uttarayan-bird-fatalities-kite-festival-india-makar-sankranti-january-14
https://www.indiawilds.com/diary/kite-flying-impact-on-birds/the information

Global Tiger Day

அரும்புலி வாழும் பல்லுயிர்ச் செழிப்புமிக்க முதுமலைக்கு உங்களை வரவேற்கிறோம்
----------------------
பூகோளப் புலிகள் நாள் 
Global Tiger Day
---------------
மானாட....புலியாட ....
என்ற தலைப்பில் 
***
"பொம்மலாட்டம்' நிகழ்வும்
 "ஒப்புரவு ஓவியம்" வரையும் பயிற்சியும் நடைபெறும்
±++++++++**
 நாள் : 29-07-2022, வெள்ளிக்கிழமை`

இடம்:  தெப்பைக்காடு  & கார்குடி, முதுமலை புலிகள் காப்பகம்

+++++++++
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 
++++++
முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அருளகம் அமைவனம்

Global Tiger Dayபூகோளப் புலிகள் நாளை முன்னிட்டு 29. 7 .2022 அன்று முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டிலுள்ள வரவேற்பு மையத்தில் "மானாட.. புலியாட' என்ற தலைப்பில் பொம்மலாட்டம் நடந்தது.  புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொம்மலாட்டம்  ஆனந்தராஜ் குழுவினர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். புலிகள் வாழும் காடு பல்லுயிர்ச் செழிப்புமிக்க காடாக இருக்கும். தாவர உண்ணிகளைக் கட்டுக்குள் வைத்து காடு செழிக்க மறைமுகமாக உதவும் என்பதையும் எடுத்துரைத்தனர்.   இதைச் சுற்றுலா பயணிகள்  கண்டு களித்தனர். மற்றொரு நிகழ்வாக ஒப்புரவு ஓவியம் என்ற தலைப்பில் எளிய முறையில் புலியை ஓவியமாக வரைவதற்கான பயிற்சியை ஓவியர் ரகுநாத் கிருஷ்ணா அவர்கள் வழங்கினார் . இதில் கார்குடி அரசு உண்டு உறைவிடப் பள்ளி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரைந்து பழகி மகிழ்ந்தனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  முதுமலைப் புலிகள் காப்பகமும்  அருளகம் அமைப்பினரும் செய்திருந்தனர். T
23 புலியை உயிரோடு பிடித்ததையும் அதைப் பிடிக்க உதவிய வேட்டை தடுப்புக் காவலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

 

Global Tiger DayGlobal Tiger DayGlobal Tiger Day

பூகோளப் புலிகள் நாளை முன்னிட்டு இன்று வாழைத்தோட்டத்திலுள்ள ஜீ ஆர் ஜி மேல்நிலைப் பள்ளியில் ஒப்புரவு ஓவியம் வரையும் பயிற்சி அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு சார்பாக நடைபெற்றது.
 இதில் பள்ளி மாணாக்கர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர். உயிரினங்கள் மீது மாணாக்கர்களுக்கு நேயத்தையும் அவற்றைப் பாதுகாப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக ஓவியம் வரையும் நிகழ்வுக்கு ஒப்புரவு ஓவியம் எனப் பெயரிடப்பட்டது என நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப்பேசிய அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் குறிப்பிட்டார். பள்ளித் தலைமையாசிரியர் தி. குமரன் அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

ரகுநாத்கிருஷ்ணா அவர்கள் ஓவியம் வரைந்துகொண்டே மாணாக்கர்களுக்கு புலி குறித்த அறிவியல் பூர்வமானத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். புலிகளின் ஒப்பற்ற தகவமைப்பு குறித்து அவர் விளக்கியவிதம் மாணாக்கர்களைக் கவரும் வண்ணம் இருந்தது. மாணாக்கர்கள் புலிகள் குறித்துக்கேட்டதற்கும் ஆர்வமுடன் பதலளிக்கப்பட்டது.

இறுதியில் பள்ளித்துணைத் தலைமையாசிரியர் ஜே. ரவி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருகளத்தின் களப்பணியாளர் பிரபு கணேசன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

Global Tiger DayGlobal Tiger Day

Interactive session with the secretaries of Dairy Co-operative Societies and Milk Inspectors

An interactive session was organized to sensitise the secretaries of milk cooperative societies and milk inspectors in order to promote the usage of vulture-safe drugs to the cattle on 30-06-22 at NMP Mahal, Kooduthurai, Bhavani. The event was organized with the support of the Department of Milk Production and Dairy Development (DMPDD), Erode district and with the active participation of the ‘Arulagam’ vulture Conservation team.

83 secretaries, who represented Andhiyur, Athani, Chennampatti, Kaunthappadi and Bhavani areas of  Aavin- Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited, participated in this event.  

The meeting was presided over by R. Chandrasekaran, Deputy Registrar, DMPDD.

Mr M. Anandan, Senior Inspector, Cooperatives, welcomed the gathering.  

Mr. S. Bharathidasan, Secretary of ‘Arulagam’ took the lead and moderated the event.  

In his inaugural speech, Mr. Bharathidasan applauded the services rendered by the Aavin Cooperative societies for the upliftment of the marginalised community.

He also pointed out the services rendered by vulture species by highlighting the fact that they act as a pandemic vaccine by consuming dead animals and preventing the spread of contagious diseases; If those species are wiped out, he explained, that humanity may face more severe infections in the future than the Covid pandemic situation that we are facing now.  Further, he brought to the attention of the audience, the serious issue of painkillers used on cattle that harm vultures that consume dead cows when the treatment fails. Dairy Co-operative Societies

He further explained that currently the drugs meloxicam’ and ‘Tolfenamic acid’ have been confirmed as safe drugs by the Indian Veterinary Research Institute and he appealed to the audience to strictly adhere to only those drugs to treat the ailment animals.  He also talked further about how to avoid painkillers and take precautionary measures by avoiding ‘mastitis’ disease by practising hygienic milking methods.

Further, he appealed that if the cattle die naturally in the habitats that lie at the edge of the forest they should not be buried and should be left in the forest as food for sanitary workers like vultures. Mr Thirumalachandran, Milk Inspector, raised an issue about insurance companies insisting that one can get insurance only if a person buries a dead cow. The forum decided to bring this to the attention of the superiors.  

Mr S. Duraisamy, secretary of Veppamarathur Milk Producers Society, appealed that the cattle should be allowed to graze in the forest. Mr Chandrasekhar, the bird watcher, suggested that the cattle owners should be aware of the disease being transmitted from livestock to wildlife and that nearby veterinarians should handle the practice of certifying the sterility of cows and that it would be best to send only certified livestock to pasture.  

A request was also made to the audience to alert ‘Arulagam’ if anybody spots vultures in their area.

Informal pamphlets on the common diseases of livestock and how to prevent them were distributed by ‘Arulagam’ team.

Mr Karthikeyan, Biologist of Arulagam, expressed his gratitude for the opportunity given to attend and speak at this meeting.

Arulagam secretary speaking Arulagam Dairy Society

பிணமான பிணந்தின்னி கழுகுகள்!

Extinction of Vultures

World Wetlands Day 2022

அருளகத்தின் தோற்றுவாயாக விளங்கிய நண்பர் அருள் அவர்களின் நினைவுப் பிறந்தநாளை முன்னிட்டும் உலக நீர்நிலைகள் நாளான  2, பெப்ரவரி, 2022 முன்னிட்டும் நம் அருளகம் சார்பாக மாயாறில் உள்ளநடுநிலைப்பள்யில் நீர்நிலைகளின் பாதுகாவலன் நீர்நாய் குறித்து விளக்கமும் நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வும் நடைபெற உள்ளது. 

நாள் - 2, பெப்ரவரி, 2022, நேரம்; காலை 10 மணி முதல் 12.30 மணி வரை
இடம்; மாயாறு அரசு நடுநிலைப்பள்ளி

world wetland day
World wetlands day

Tree planting at Vadakalur

Tree planting at Vadakalur

Hedgehog Conservation

A detailed study on Hedgehog was done in the Tirupur district. Recommendations for the conservation of Hedgehog's habitat and awareness programs we conducted in Kethelrev panchayat. A detailed report is attached below:

யானை மரணம் உணர்த்தும் சேதி

மிசன் மதுக்கரை மகாராஜ் என்ற பெயரில் மதுக்கரை மக்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை யானையை உயிருடன் பிடிக்கப் போடப்பட்ட திட்டம் அந்த யானையின் மரணத்தில் முடிந்திருக்கிறது. உண்மையில் அந்த யானை வனத்துறையிடம் பிடிபட்டபோதே செத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவது தடவையாக அந்த யானை இறந்திருக்கிறது. ஆம் எஞ்சிய காலம் முழுவதும் தன் குடும்பத்தை விட்டுப்பிரிந்து ஏதோ ஒரு பாகன் கையில் அடிமையாய் இருப்பதை விட அந்த யானை இறந்ததேமேல் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஒரு நாட்டை அழிக்க அமெரிக்கா செய்யும் செயலைப்போல ஒற்றை யானையை ஒரு தீவிரவாதியாக சித்தரித்து அதிகாலை 4 மணிக்கு இந்த இடத்தை கடக்கும் அப்போது பிடிபட்டு விடும் என்று பின்லேடன் ரேஞ்சுக்கு பரபரப்பை கூட்டி ஊடகத்துறையினரும் செய்தி வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

யானை இறந்ததற்கு மயக்க மருந்து அதிகமாகச் செலுத்தப்பட்டது தான் முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்த மயக்கத்தினூடேயே 10 மணி நேரம் பயணமாக வரகளியாறு முகாம் கொண்டு செல்லப்பட்டு. உணவு தண்ணீரின்றி கடும் உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு கொட்டிலில் அடைக்கப்பட்டிருக்கிறது. பாதி மயக்கத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலையில் அலைக்கழிக்கப்பட்ட எரிச்சலும் சேர்ந்து கொள்ள அதிலிருந்து மீள முயற்சித்து அதன் மத்தளத்தால் முட்டி மோதியிருக்கிறது. அப்போது ஏற்பட்ட காயத்தால் மண்டையில் இரத்தம் உறைந்து மூளைச் சாவடைந்திருக்கிறது எனத் தெரியவருகிறது. இந்த மரணத்தின் மூலம் நமக்கு பல செய்தியை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது.
 

இந்த மரணம் உணர்த்தும் சேதி என்ன?

இதே கேள்வியை வேறு மாதிரி கேட்டால் அனைவருக்கும் எளிதில் புரியுமென்று நினைக்கிறேன். ஏன் யானைகள் காட்டை விட்டு வெளியே வருகின்றன? இந்த கேள்வியே தவறு தான் என்பதால் அப்படி கேட்கத் தோன்றவில்லை. காரணம் இன்று நாம் காடு என வரையறுத்து வைத்துள்ள இடமே மிகவும் ஒருதலை பக்கமானது. அதுவும் மிகவும் சொற்பமான இடங்களே அவைகள் வாழ ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் காடுகள் என்பது ஏதோ ஒரு விலங்கு காட்சி சாலை போலவும் விலங்குகள் அந்த இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்ற தவறான பார்வையும் புரிதலும் பொது மக்களிடம் பரவலாக உள்ளது. 

இந்தியா முழுவதுமே நன்கு பாதுகாக்கப்படும் காடுகள் வெறும் ஐந்து சதவீதம் தான். எஞ்சி உள்ள காடுகளும் தொடர்ச்சியற்றும் நம்மால் சிறு சிறு துண்டாக சின்னா பின்னப் படுத்தப் பட்டும் வளமற்றும் உள்ளன. நம்மால் பயிர் செய்ய முடியாத பாறைகளையும் முகடுகளையுமே நாம் விலங்குகளுக்கென விட்டு வைத்திருக்கிறோம். வனவிலங்குகள் வாழ்வதற்குத் தோதான அருமையான ஆற்றுப் படுகைகள் வளமான பள்ளத்தாக்குகள் ஆற்றோரங்கள், தடாகங்கள் எல்லாம் ஆன்மீக வாதிகளாலும் கல்வி வள்ளல்களாலும் கார்ப்பரேட் கம்பெனிகளாலும் ரிசார்டுகளாலும் பெரும் விவசாயிகளாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இது போதாதென்று காட்டை ஒட்டியுள்ள நீர் நிலைகளையும் நாலாபுறமும் ஆக்ரமிப்பு செய்துவிட்டோம். 

கோடை காலத்தில் நீர்நிலைகள் வற்றும்போது அந்த இடத்தில் புல் நன்கு வளர்ந்திருக்கும். அந்த வறட்சியான சூழலில் அந்த ஒரு இடத்தில் தான் தீனியும் தண்ணீரும் கிடைக்கும். அந்த இடத்தையும் நாம் விட்டு வைப்பதில்லை அதையும் ஆக்ரமித்து குறுகிய கால வெள்ளாமை செய்வதாலும் ஆடு மாடுகளை மேய்ப்பதாலும் காட்டை ஒட்டியுள்ள அந்த வளமான இடமும் விலங்குகளுக்கு மறுக்கப்படுகிறது.  கடும் வெயில் காலத்தில் அவைகள் தாகத்திற்கு தண்ணீர்குடிக்க வருவதற்கே பல மணி நேரம் காத்து இருக்க நேரிடுகிறது. காரணம் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் இருக்கும் அளவுக்கு அதிகமான மனித நடமாட்டம் தான்.

யானை போன்ற விலங்குகள் உச்சி வெயிலில் இளைப்பாற ஆற்றோரத்தைத் தான் தேர்ந்தெடுக்கும். ஆனால் அதற்கு தேவைப்படும் முக்கியமான இடங்களை எல்லாம் நாம் பலவந்தமாக எடுத்து விட்டு வறண்டு கிடக்கும் பொட்டல் தரைகளை அவைகளுக்கு விட்டால் அவைகள் உணவுக்கும் தண்ணீருக்கும் எங்கு செல்லும். 

இந்தச் சூழலில்தான் அவை காட்டிற்கு அருகாமையில் பசுமையாகத் தெரியும் வெள்ளாமை செய்யும் இடங்களை நாடி வருகின்றன. ஏற்கனவே கடனை உடனை வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இது பெரும் இடஞ்சலாகி விடுகிறது. வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பை உடனே கணக்கிட்டு அவ்வப்போது அதற்கான நட்ட ஈட்டை பட்டுவாடா செய்தால் அவர்களுக்கும் பேருதவியாய் இருக்கும். அவர்களை அலைக்கழித்து எரிச்சல்படுத்தி அமைச்சர்கள் முன்னிலையில் நிவாரணம் தருவதற்காக காலதாமதப் படுத்தி பந்தாடுகின்றனர். இந்த எரிச்சலை அவர்கள் மறுபடியும் விலங்குகள் மேல் காட்டுகின்றனர். இந்த அடிப்படையில் தான் விவசாயிகள் வனத்துறையினரைப் பார்த்து உங்கள் விலங்கை நீங்கள் காட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூச்சலிடுகின்றனர். 

ஆயினும் வேறு மாதிரியான விவசாயிகளும் இருக்கவே செய்கின்றனர். தன் தோட்டத்தை சேதப்படுத்திய யானையைப் பார்த்து ஒரு விவசாயி, நாம ஒரு சான் வயிற்றுக்கே பசிக்கு ஆளாப் பறக்கிறோமே இவ்வளவு பெரிய ஜீவன் என்ன செய்யும் என்று குறிப்பிட்டதைக் கேட்டு வியந்திருக்கிறேன். யானை தன் தோட்டத்திற்கு வந்து சென்றால் சுபகாரியம் கைகூடும் என்ற நம்பும் விவசாயிகளையும் சந்தித்திருக்கிறேன். 

யானைகள் உண்டு அழிப்பதை விட காலில் மிதி பட்டு நேரும் சேதாரம் தான் அதிகம். அதை விரட்டும் போது இங்கும் அங்கும் ஓடுவதால் நேரும் சேதாரத்தால்தான் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதாக்குறைக்கு சொரணையே இல்லாமல் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கும் கூட்டத்தாலும் செல்பி எடுக்கும் சிறு புத்திக்காரர்களாலும் யானைகளும் வனத்துறையினரும் படும் துயரம் சொல்லி மாளாது.

நிர்பந்தம் காரணமாக அவைகள் காட்டை விட்டு வெளியே வந்தாலும் தனக்கு பாதுகாப்பு காடுதான் என்று அவைகள் திரும்பிச் செல்ல நினைத்தாலும் முடிவதில்லை. காரணம் ரியல் எஸ்டேட் கும்பல்களாலும் ரிசார்ட்டுகளாலும் சுரங்கம்தோண்டும் போது வெடிக்கும் வெடியாலும் மணல் குவாரிகளாலும் மின் வேலிகளாலும் முள் கம்பி வேலிகளாலும் மின் விளக்காலும் அவை திரும்பிச் செல்லும் இடம் தெரியாமல் கண்ணைக் கட்டி நாட்டில் விட்டதைப் போல திக்குமுக்காடுகின்றன. 

இதனால் வனத்துறையினருக்கு யானைகளைச் சமாளிப்பதே பெரிய சவாலாக உள்ளது. யானைகள் என்ற பேச்சை எடுத்தாலே யானை மனித மோதல் தான் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தச்சூழலில் வனவிலங்குகள் பாதுகாப்புக்காக இருக்கும் வனத்துறையும் யானைகள் பாதுகாப்பை விட யானைகளை விரட்டுவதற்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. தான் பணிபுரியும் காலத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் தப்பித்தால் போதும் என்றே பெரும்பாலான வனத்துறை ஊழியர்கள் விரும்புகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை தற்காலிகத் தீர்வாக வெடியை வெடித்து காட்டுக்குள் விரட்டுதல் போன்ற மேலோட்டமான செயல்களை செய்து காலத்தைக் கழித்து விட்டு வேறு இடம் மாற்றலாகிச் சென்று விடுகின்றனர்.

யானை விலங்கு மோதலைத் தவிர்க்க பல்வேறு வழிவகைகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்தாலும் மக்களின் உளவியலைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் ஆளும் ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் விதமாகவும் இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் தனக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்ற அடிப்படையிலும் தான் அதிகாரிகள் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது அகழி வெட்டுதல், சூரிய மின் வேலி அமைத்தல், தொட்டி கட்டி அதில் தண்ணீர் ஊற்றுதல், தீவனப் புல் வளர்த்தல்,  சாலையைக் கடக்க மேம்பாலம் அமைத்தல் போன்ற மேலோட்டமான தீர்வுகளைத் தான் செயல்படுத்த விரும்புகின்றனர். அதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

யானைகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது அதனால் தான் அவை உணவு தேடி ஊருக்குள் வருகின்றன என்று சொல்வதிலும் அர்த்தம் இல்லை. எந்த ஒப்பீட்டின் படி அதன் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறோம் என்பதை வைத்துத்தான் இந்த முடிவுக்கு வரமுடியும். 

ஆயினும் வருங்காலங்களில் இப்போது உள்ளதை விட யானைகள் எண்ணிக்கை ஒருவேளை அதிகமாகலாம். இதனால் புதிய புதிய இடங்களில் எல்லாம் யானைகள் புக ஆரம்பிக்கலாம். அதனால் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான பிணக்கு வருங்காலங்களில் இன்னும் அதிகமாகலாம். மனிதர்களா யானையா என்று பார்த்தால் மனிதர்கள்தான் முதன்மையாகத் தெரிவார்கள். காரணம் யானைகளுக்கு ஓட்டு இல்லை. இந்த கண்ணோட்டத்தை விட்டுவிட்டு யானைகளுடன் இணக்கமாக வாழ்வது எப்படி என்று திட்டம் வகுக்க வேண்டும். ஏனெனில் யானைகள் காட்டின் ஆதார உயிரினம். காட்டில் யானைகள் இருந்தால் நம் குடிநீருக்கும் பங்கம் வராது. நிலைமை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது. ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டும். 

நாம் என்ன செய்ய வேண்டும்?

• இந்த திட்டத்தில் வனத்துறையினரோடு வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் விவசாயத்துறையினர், காவல் துறையினரும் கைகோர்க்க வேண்டும்.

• ஆற்றோரக் காடுகள் என்ற அற்புதமான சூழலியல் மண்டலத்தையே நாம் அழித்து மாபாதகம் செய்து விட்டோம். ஆயிரம் ஏக்கர் வளமற்ற காட்டுப்பகுதியை விட சில நூறு ஏக்கர் வளமான ஆற்றுப் படுகைகள் அவைகளுக்குப் பெரிதும் உதவியாயிருக்கும். எனவே எப்படி பட்ட நிலம் இருந்தால் யானைகள் வாழ்வாங்கு வாழமுடியும் என்று ஆய்ந்துணர்ந்து அந்த இடங்களை மீட்டெடுக்க வேண்டும்.

• வனத்துறையில் ஆற்றல் மிகு அலுவலர்கள் பலர் உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி ஆற்றோரங்களிலும் நீர்நிலைகளிலும் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி வனவிலங்குகள் சுதந்திரமாகத் திரிய வழிவகை செய்ய வேண்டும்.

• சிதறுண்ட வாழிடங்களை இணைக்கும் நடவடிக்கையையும் அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

• வருவாய்த்துறையினரிடம் உள்ள வளமான இடங்களை எல்லாம் கண்டறிந்து அவைகள் தனியார் கைகளுக்கும் குவாரி கொள்ளையர்கள் கையிலும் சிக்காமல் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

• பொதுப்பணித்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளை குறுகிய கால குத்தகைக்கு விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

• ஒப்பந்தம் காலாவதியான இலாபம் தராத தேயிலை, காபி தோட்டங்களை அழித்து விட்டு மறுபடியும் காடாக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

• யானைகள் மேயாமல் இருக்கும் மாற்றுப்பயிர் என்ன? அதை வளர்த்தால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்குமா என்பதை வேளாண்துறை ஆய்வு செய்ய வேண்டும்.

• யானைகள் வலசை செல்லும் பாதையில் புதிதாக முள்கம்பி வேலிகளை அமைப்பதைத் தடுப்பதோடு ஏற்கனவே உள்ளதை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கையில் உதவிசெய்கிறேன் பேர்வழி என்று பொதுமக்களும் புகைப்படம் எடுப்பவரும் வனத்துறையினருக்கு இடைஞ்சல் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இந்தப் பணியில் ஊடகத்துறைக்கும் பெரும் பங்குண்டு என்பதையும் பின்வரும் சம்பவம் வாயிலாகக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருமுறை தளமலையிலிருந்து அருள்வாடிக்கு இரு சக்கர வாகனத்தில் பயணிக்க நேர்ந்தது. வழியில் சாலை ஒரத்தில் ஒரு ஒற்றையானை மேய்ந்து கொண்டிருந்தது. நான் போகலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். என்னைப் பார்த்துவிட்டு தன் உடம்பை பின்பக்கம் திருப்பி நின்று கொண்டு மேய ஆரம்பித்தது. அதன் செய்கை நீ பாட்டுக்கு உன் வழியில் செல் என்று சொல்வதைப் போல இருந்தது. அதை உணர்ந்து படபடப்புடன் அந்த இடத்தை விருட்டென்று கடந்து வந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி வந்து வண்டியை நிறுத்தி புள்ளினங்களைப் பார்த்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். என்னைப் போலவே பொரி கடலை வியாபாரி, உர மூட்டை எடுத்து வந்த விவசாயி, பால்காரர், எண்ணெய் வியாபாரி என நான்கு பேர் அரை மணி நேரத்தில் அந்த இடத்தை கடந்து சென்றனர். யாருக்கும் எந்த தீங்கும் நேரவில்லை. அடுத்த நாள் டீக்கடையில் அன்றைய செய்தித்தாளை புரட்டியபோது ‘’துரத்தியது காட்டு யானை’’ என்ற தலைப்பில் தாளவாடியில் சுற்றித்திரியும் ஒற்றையானையால் பொதுமக்கள் பீதி என்று அதே யானையைப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது.

இதைப் படித்ததும்  ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதைப் போல என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. அவைகளின் வாழிடத்தை நாம் அபகரித்து விட்டு அவைகள் ஊருக்குள் புகுந்து விட்டன என கூப்பாடு போடுகிறோம் என்பதை மட்டுமாவது நினைவில் கொண்டு செய்தி வெளியிடுமாறு வேண்டுகிறோம்.பழங்குடிகள் யானையைப் பற்றிச் சொல்லும் போது பெரியவர் அந்த பக்கம் இருக்கிறார். கவனமாகச் செல்லுங்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படிப் பட்ட மக்கள் அதிகம் இருப்பதாலும் வனத்துறையின் கட்டுப்பாட்டாலும் தான் இன்றும ஆசிய அளவில் அதிகமான எண்ணிக்கையில் முதுமலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளும் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது, யானைகள் பெரிய மனம் படைத்த கணவான்கள் என்பதை உரக்கச் சொல்லுவோம்.

 

Page 4 of 13

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy