Wildlife Conservation

பச்சோந்தியும் பாறுவும்

பச்சோந்தியும் பாறுவும்

பாறு கழுகுகளும் பச்சோந்தியும்

பின்பனிக் காலம், பாறு கழுகுகள் கூடமைக்கத் தயாராகும் காலம் என்பதால் அதுதொடர்பானகளப்பணிக்குமுதுமலைக்குப் பயணித்தோம்.என்னுடன்ஆராய்ச்சியாளர்மணிகண்டனும்உடன்வந்தார். கார்காலம்வனத்தைச்செழிப்பாக்கியிருந்தது. மாயாறுசெல்லும்சாலையில்பயணித்தபோதுபச்சோந்தி ஒன்று சாலையில்கண்ணில்பட்டது. காற்றில்குச்சிஅசைவதுபோலஅடி மேல் அடி எடுத்து வைத்து நகரும் அழகை அது சாலையைக் கடக்கும் வரை ஓரமாக நின்று இரசித்துக் கொண்டிருந்தோம். கூடவே எதிர்ப்புறம் விரைந்து வரும் வாகனத்தால் அது அடிபட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாயிருந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதன் உருவம் கபில நிறத்திற்கு மாறியது. கண்களை ஓர் உருட்டி உருட்டி தலையைச் சாய்த்து என்னைப் பார்த்தது. அதன் பார்வை, என்னை ஏனடா நீங்கள் அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்கு ஒப்பிடுகிறீர்கள் என்பது போல இருந்தது.

அன்று அந்தி சாயும் நேரத்தில்மலைப்பாம்பு ஒன்றும் கண்ணில் பட்டது. அது மெதுவாகத் தன் உடலைச் சுருக்கியும் இழுத்தும் அவ்வப்போது நாக்கை நீட்டியபடி முன்னோக்கி நகர்ந்து விரைவாகச் சாலையைக் கடக்க முயற்சித்தது. நமக்கு அதைப் பார்த்ததும் எப்படி பயம் ஏற்படுகிறதோ அதேபோல அதற்கும் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றியது. மனிதர்களிடம் மாட்டிக் கொண்டால் ஒன்று அடித்துக் கொன்று விடுவார்கள். அல்லது கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்டோ அல்லது நான்கைந்து பேர் ஒரு சேர நின்று பிடித்துக்கொண்டோ நிழற்படங்களும் தன்படங்களும் (செல்ஃபி) எடுத்து உண்டு இல்லை என்று பண்ணிவிடுவான்கள் என்று பயந்து இயல்புக்கு மீறிய வேகத்தோடு நகர்ந்தது. ஓரே நாளில் இவை இரண்டையும் பார்த்தது மனதுக்குப் பூரிப்பைத் தந்தது.

அடுத்தநாள்செம்மநத்தம்செல்லும்சாலையிலும்ஒருபச்சோந்திகண்ணில்தென்பட்டது. முதன்முதலாகஇதைச்சற்றேறக்குறைய 30 ஆண்டுகட்குமுன்எனதுதகப்பனாருடன்தேவாங்கைப்பார்ப்பதற்காககரூர்மாவட்டம்கடவூருக்குச்சென்றிருந்தபோதுஓடைமணலில்அதுஓய்யாரமாகநடந்துசென்ற காட்சி என்நினைவுக்குவந்தது. அதன்பின்ஒருமுறைஎன்வீட்டருகிலேயேஇதனைக்கண்டிருக்கிறேன். இதன் உடலமைப்புசுற்றுப்புறச்சூழலோடுவாகாகப்பொருந்திவிடுவதால்பொதுவாகநம்கண்பார்வையிலிருந்துஇவைஎளிதில் தப்பிவிடுகின்றன. திறந்தவெளிக்கு வரும்போது தான் அவற்றைப் பார்க்க முடியும். இது போன்ற அமைப்புடைய பல்வேறு உயிரினங்களை ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வியக்க முடியும். அந்தநினைப்புமேலோங்கவண்டியைஓரங்கட்டிவிட்டுஅருகிலிருந்தசிற்றோடை ஓரமாகஈரநிலத்தில்கால்பதித்துபாறுகழுகுகள்கூடமைத்திருக்கும்இடத்தைத்தேடிக்கவனமாகநடந்துசென்று கொண்டிருந்தோம்.

அரைமணிநேரஆற்றோரப்பயணித்திற்குப்பின்இரண்டுமலைப்பாம்புகள் மூங்கில்தூரைஒட்டிவளர்ந்திருந்த உண்ணிச்செடிப் புதரருகே தென்பட்டன. எங்களைக்கண்டதும்இரண்டுமேபுதரினுள்சுருண்டுதன்னைமறைக்கமுயற்சித்தன. புதருக்கு அடியில் குனிந்து பார்த்தபோதுதெரிந்தஅந்தமலைப்பாம்பின்உருவம்என்னைமலைக்கவைத்தவிட்டது. இதுவரைநான்பாரத்ததிலேயேஉருவில்பெரிதானமலைப்பாம்புஇவைதான். எம்மோடுதுணைக்குவந்தபழங்குடியினரான சோமன் அவர்களும் இதையேசொன்னார். காட்டுக்குள்ளேயசுற்றித்திரியும்அவரேஇப்படிக்கூறியது என்னைமேலும்வியப்பிலாழ்த்தியது. ஓடைக்கருகில்நீர்அருந்தவரும்மானைக்கூடஇதுவளைத்துச்சுருட்டிஇரையாக்கிவிடுமளவுக்குஅதன்உடலமைப்புஇருந்தது. அடுத்தவழித்தோன்றலைஉருவாக்கும்முனைப்போடுஅவைஇரண்டும்கலவியில்இருந்திருக்கலாம்,எனவேஅவற்றைத்தொந்தரவுசெய்யவேண்டாம்என்றுஅவ்விடத்தைவிட்டுஉடனேநகர்ந்தோம்.

இந்தப்பாம்பைபார்த்துவிட்டுநகர்ந்தபோது,நான்எட்டாம்வகுப்பில்படித்துக்கொண்டிருந்தபோது, கதைசொல்லும்ஆசிரயராய்வாரம்ஒருமுறைவந்துசெல்லும்தனிஸ்லாஸ்சார்அவர்கள்கூறியகதைஒன்றுநினைவில்வந்துபோனது. அவர்வருகையைஎல்லாமாணவர்களும்ஆவலுடன்எதிர்பார்த்திருப்போம். அன்றுஅவர்வகுப்புக்குவந்தபோதுஎங்கள்ஊருக்குச்சிறப்புசேர்க்கும்சிறுமலையில்நடந்தஉண்மைச்சம்பவம்ஒன்றை அன்றைய வகுப்பில்சொன்னார். அனேகமாகஅந்தச்சம்பவம்அப்போதுதினத்தந்தியில்கூடவெளியாகியிருக்கலாம். அவர்சொன்னகதைஇதுதான்.

சிறுமலையில்இடையன்ஒருவர்ஆடுமாடுமேய்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இலைதளைகளைத்தீவனமாகவெட்டிப்போடுவதற்குத்தோதாகஇடுப்பில்அரிவாள்ஒன்றையும்சொருகிவைத்திருக்கிறார். அவர்எதிர்பாராதநேரத்தில்மலைப்பாம்புஒன்றுஅவரைச்சுற்றிவளைத்திருக்கிறது. மலைப்பாம்பின்பிடியிலிருந்துஅவர்தப்பமுடியவில்லையாம். அவரோடுசேர்ந்துஅவரதுஇடையில்சொருகிவைக்கப்பட்டிருந்தஅரிவாளும்பாம்பால்விழுங்கப்பட்டுஅதன்உடலுக்குள்செல்லச்செல்லதுருத்திக்கொண்டிருந்தஅரிவாள்பாம்பின்உடலைக்கீறிஇரண்டுதுண்டாக்கிவிட்டதாம்பாம்பின்உடலுக்குள்சென்றவர்இரத்தக்கறையுடன்உயிர்பிழைத்துமீண்டும்வெளியேவந்துநடந்தவற்றைஊராரிடம்சொல்லியிருக்கிறார். இந்தக்கதையைஅந்த ஆசிரியர் எங்களிடம் கூறியபோதுஅவர்அந்தச்சம்பவத்தைநேரில்பார்த்தவர்போல்விவரிப்பதைவியப்போடுகேட்டுக்கொண்டிருந்தோம். கற்பனைக்காட்சியாகஇரத்தக்கறைபடிந்தமனிதனின்பிம்பம்எனக்குள்வந்துபயமுறுத்தியதும்நினைவுக்குவந்தது.

அவரிடம்கதைசொல்லும்உத்திஒன்றுஉண்டு. இந்தவாரம்கதைசொல்லும்போதுபோனவாரம்விட்டதிலிருந்துதொடங்கமாட்டார். போனவாரம்சொன்னதில்பாதியைமீண்டும்சொல்லுவார். இப்படியாகஅவர்ஒருபக்கக்கதையையேநான்குவாரத்திற்குநீட்டிப்பார். எந்தப்பொழுதுபோக்கும்இல்லாமல்இருந்தஅன்றைக்குஎங்களுக்குஅவர்தான்எல்லாம். அவர்வருகைஎங்களைக்குதூகலப்படுத்தும்என்பதுஉண்மை. இப்போதுஎடுக்கப்படும்நெடுந்தொடர்இயக்குநர்கள்அவரிடம்நிறையப்படிப்பினைகளைப்பெறமுடியும். பச்சோந்தியும் பாறுவும்

இன்றுஅந்தக்கதையைநினைத்துப்பார்த்தபோது, அதுநிச்சயம்ஒருபுனைவுக்கதையாகத்தான்இருக்கமுடியும்என்றுதோன்றியது. ஒருவிதகதாநாயகத்தன்மையைதனக்குஏற்றுவதற்காகப் பலரும் காட்டுயிர்களைத் தாங்கள் எதிர்கொண்டவிதம் குறித்து இப்படிப்பட்ட கதையைப் புனைவதைக் கேட்டிருக்கிறேன். அண்மையில்வாட்சப்பில்வந்தகாணொலிஒன்றும்நினைவில்வந்துஎரிச்சலூட்டியது. அந்தக் காணொலியில் ஆடுஒன்றைவிழுங்கியமலைப்பாம்பைஉருட்டிமிரட்டிவிழுங்கியஆட்டைக்கக்கவைத்துஅதைப்படமாக்கிப்பதிவிடப்பட்டிருந்தது . தனதுஉடலின்அனைத்துஅணுக்களையும்ஒன்றுதிரட்டி அந்தஆட்டைமலைப்பாம்புவெளித்தள்ளியகாட்சியைப்பார்த்தபோதுஅந்தச்செயலைச்செய்தவர்மேல்எரிச்சல்வந்தது. விழுங்கியஆட்டைவாந்திஎடுக்கவைப்பதுஉவப்பானதாகப்படவில்லை. அறமிழந்தசெய்கையாகப்பட்டது.

இந்தச்சிந்தனைநெஞ்சில்எழஆற்றோரமாய்வளர்ந்திருந்தஒவ்வொருமத்திமரத்திலும்ஏதேனும்கூடுதென்படுகிறதாஎன்றுஅன்னாந்துபார்த்தபடியேநடந்துசென்றோம். பாறைக்கருகேஇருந்தமத்திமரத்தில்ஓரேமரத்தில்இரண்டுகூடுகளைப்பார்த்தோம். அடைகாத்துக்கொண்டிருந்தபாறுகழுகுகள்கூட்டிலிருந்துதலையைநீட்டிப்பார்த்தன. முதல்கூட்டிலிருந்தபறவைகூட்டைவிட்டுவெளியேவந்துமேல்புறக்கிளையில்அமர்ந்துஎங்களைநோட்டம்விட்டது. ஐந்தாறுநிமிடத்திற்குப்பின்மரத்திலிருந்துஎழும்பிஒரு 400 மீட்டர்சுற்றளவிற்குஒருவட்டமடித்துவிட்டுமீண்டும்கூட்டில்அமர்ந்தது. அடைகாக்கும்வேலைமும்முரமாய்த்தொடங்கிவிட்டதுஎன்பதைஅறிந்துமகிழ்ச்சியுற்றோம். இன்னும்இரண்டுவாரம்கழித்துவந்துவேறுஇடங்களுக்கும்சென்றுபார்க்கவேண்டும்என்றுமுடிவுசெய்துவிட்டுத்திரும்பினோம்.

இரண்டுநாட்கள்கழித்துமாயாறுபள்ளத்தாக்கில்அமைந்துள்ளகல்லாம்பாளையம்சென்றபோதும்பச்சோந்திஒன்றுகாராச்சிக்கோரைஊர்அருகேகண்ணில்தென்பட்டது. அய்யலூரில்தேவாங்கைப்பார்க்கப்போனபோதும்ஒருபச்சோந்திஅந்திசாயும்வேளையில்உச்சிக்கிளையில்அமர்ந்துவாலைவட்டமாகச்சுருட்டிமிடுக்குடன்அமர்ந்திருந்தது. அன்றுமுழுநிலவுநாளாய்இருந்ததால்இருட்டியபிறகும்அதன்தோற்றம்தூக்கலாகத்தெரிந்தது. அதன்பின்ஈரோடைமாவட்டம்அந்தியூர்பகுதிக்குச்சென்றுவிட்டுத்திரும்பிக்கொண்டிருந்தபோதும்ஒருபச்சோந்திதென்பட்டது.

இந்த மாதம் பச்சோந்தி மாதம் என்பதைப் போலச் செல்லும் இடங்களிலெல்லாம் அவை தென்பட்டன. எப்போதும்இல்லாமல்இந்தமாதம்மட்டும்இவைகண்ணில்படுவதுஏன்என்பதற்குஅண்மையில்வாட்சப்பில்வந்தபுகைப்படம்ஒன்றுபதிலுரைத்தது. அதில்வாகனத்தில்நசுக்கப்பட்டுமரித்தபச்சோந்திஒன்றும்அதன்வயிற்றிலிருந்துவெளிவந்தஆரஞ்சுநிறமுட்டைகள்பதினேழும்தரையில்அப்பியிருந்ததைஒருஅன்பர்பதிவிட்டிருந்தார். இந்தக்காலகட்டம்இனப்பெருக்கக்காலம்என்பதைஅந்தப்படம்குறிப்பால்உணர்த்தியது. அவைதன்துணையைத்தேடிமாற்றிடம்செல்வதால்தான்அவைஇந்தக்காலகட்டத்தில்நம்கண்ணில்அடிக்கடிபட்டிருக்கக்கூடும்என்றுஅவதானிக்கமுடிந்தது. இந்தகாலகட்டம்தான்பாறுகழுகுகளும்கூடமைக்கும்காலம் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy