ஏப்ரல் 7. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியம்  நல்லூர்  ஊராட்சியில்  வாழ்ந்து காட்டுவோம்  திட்டத்தில்  செயல்படும்  உற்பத்தியாளர் குழுவைச்  சேர்ந்த 20 மகளிர்களுக்கு அருளகம்  சார்பில்  நாற்றுப் பண்ணை அமைப்பது மற்றும்  நாற்று  உற்பத்தி செய்வது எப்படி என்பது குறித்துத்  தொழில் நுட்பப் பயிற்சி  அளிக்கப்பட்டது.  வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்  சமுதாய. தொழில்சார் வல்லுனர்  திருமதி  சந்திரா அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.    நாற்றுகள்  உற்பத்தி செய்தலில்  விதை  சேகரிப்பு, விதை நேர்த்தி,  தாய்ப் பாத்தி அமைப்பு, மண் கலவை  முறை  மற்றும்  விதை நடுதல்,  தண்ணீர் தெளிக்கும் முறை குறித்து   அருளகத்தின் சார்பில்  திருமதி கவிதா  அவர்கள் விளக்கமளித்தார்.   அருளகம் செயலர் சு.பாரதிதாசன் நாற்றுப்பண்ணைக் கருவிகள் பராமரிப்பு பண்ணை நிர்வாகம் குறித்து விளக்கினார்.  அருளகத்தின் பொருளாளர் அமிர்தலிங்கம்  அவர்கள் நாற்று பண்ணை  வாழ்வதாரத்திற்கான தொழில்சார்  முறையாக. மேற்கொள்வது  குறித்து  விளக்கமளித்தார்.

Nursery System

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *