தடுப்பூசி மையங்களில் பல்வேறு வகையான ஆபத்தான கழிவுகள் உருவாகின்றன என்பது நாம் அறிந்ததே. இந்தக் கழிவுகள் ஏனைய கழிவுகளோடு கலக்கும்போது எல்லாமே மோசமான கழிவாக மாறும் ஆபத்து உண்டு. இதனைக் களைய தடுப்பூசிமையங்களில் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து பயிற்றுநர்களை உருவாக்குவதற்கான கூட்டம் இன்றும் நாளையும் (18 & 19, ஜனவரி, 2023) தமிழ்நாடு அரசு குடும்ப நல அமைச்சகத்தின் பயிற்சியாளர் மையத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் குடும்ப நல அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் டாக்சிக் லிங்க் என்ற அமைப்பின் மேற்பார்வையில் அருளகம் அமைப்பு இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.

Training of Trainers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *