‘மஞ்சள் முகப் பாறு’ எனப்படும் ‘Egyptian vulture’ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிப் பகுதியில் பாறைப் பொந்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் வசித்துவந்த செய்தியை வன அலுவலர் ஆனந்த், ஓய்வுபெற்ற வனப் பாதுகாவலர் கணேசன் ஆகியோர் என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.

தமிழகத்தில் இல்லாத நிலைக்குச் சென்றுவிட்ட மஞ்சள் முகப் பாறு, தற்போதும் அங்கு வாழ்கிறதா என்று பார்த்துவரவேண்டும் என்ற ஆவல் சில ஆண்டுகளாகவே இருந்தது. கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால், அங்கே செல்வதற்கான வாய்ப்பு தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. ஒரு வழியாக அது அண்மையில் நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *