அருள் நினைவு நாளை முன்னிட்டு 31 நவம்பர் 2022 அன்று, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் சூழல் குறித்து கலந்துரையாடினோம். அரிய மரங்களுக்கான நாற்றுப்பண்ணை குமரகுரு கல்லூரி வளாகத்தில் செயல்படுவது குறித்து விளக்கம் அளித்தோம். எங்களது செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருந்து வரும் குமரகுருக் கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றியினையும் தெரிவித்தோம். சுமார் 60 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர். விதை நடுவது பை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
