அருள் அவர்களின் 24 வது நினைவு நாள் நிகழ்வு அக்டோர் 31 அன்று கோயமுத்தூரில் உள்ள அருளகம் அலுவலகத்திலும் கள அலுவலகமான இராமேசுவரத்திலும் கடைபிடிக்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு கார்த்திகா இராஜ்குமார் தலைமை தாங்கி அருள் அவர்களுடன் தனக்கிருந்த நட்பையும் அவரது கலகக் குணத்தினையும் நினைவு கூர்ந்தார். 

 

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டை நாவல் மர ஆண்டாக அறிவித்ததை முன்னிட்டு அருளகம் பூந்தளிர்  நாற்றுப்பண்ணையில் நாவல் விதைகள் நடப்பட்டன. 

அருள் நினைவு நாளை முன்னிட்டு நாற்றுப்பண்ணையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.

 

இராமேசுவரத்தில் அருள் அவர்களின் 24 வது நினைவு நாளை முன்னிட்டு 24 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்விற்குத் தன்னார்வலர் அன்பு அவர்கள் முன்னிலை வகித்தார். அருளகம் பணியாளர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகளை நட்டனர்.

இந் நிகழ்வில்  அருள் அவர்களது புதல்வன் அவிநாசு முதல் முறையாகக் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு. அவருக்குத் தோழர் இராம்மோகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். ‘பாறு கழுகுகளைத் தேடி’ என்ற நூலை அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் வழங்கினார். 

 

அருள் அவரது  விருப்பத்திற்கு ஏற்ப குரலற்றவர்களின் குரலாக அருளகம் தொடர்ந்து இயங்கும் என உறுதி எடுத்துக்கொள்வோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *